பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 .

101

6

ஓ!ஓ!ஓ! பார்ப்பனரே!

ஊழி பெருகி உலகம் புரண்டாலும் உளந்திருந்த மாட்டீர்கள், ஒ:ஓ!ஓ! பார்ப்பனரே! வாழிதும் உள்ளம் வாழி இனவுணர்வு! வாயார வாழ்த்துகின்றேன்; ஆனாலும் ஒன்றுரைப்பேன்! "ஆழி உலகமெலாம் ஆண்டிருந்த செந்தமிழர் ஆற்றல் குறைந்தார்; அணுவாய்ச் சிதைந்துவிட்டார்; பூழி மணலில் புதையுண்ட்ார்" - என்றே, நீர் பொய்க்கனவு கண்டிருந்தீர்; பெர்ங்கிவிட்டார், திந்திமிதீம்:

ஒன்றன்று மூவா யிரமாண்டாய் எம்வரலாற் றுண்மை மறைத்திருந்தீர், ஒ:ஒ:ஓ! பார்ப்பன்ரே! கொன்றன்றே, ஆழக்குழிவெட்டி மூடிவிட்டீர் குலங்கோடி செய்தீர்; மதப்புரட்டு கோடிசெய்தீர்! 'நன்றன்று நன்றி மறப்பதென்று கற்றிருப்பீர் நடந்த திருட்காலம்; நண்ணிற்று பேரொளியும்! இன்றன்று நாளையன்று என்றேனும் எந்தமிழர் இழந்தபுகழ் மீண்டுமிங்கே ஏற்றுவர்காண்: திந்திமிதீம்!

ஊற்றுப் பெருக்காய் உணர்வெடுத்துப் பாய்ந்ததுகாண்! உளந்திருந்திக் கொள்ளுங்கள், ஒ ஓ ஒ! பார்ப்பனரே! கூற்றுக் கொதிப்புப்போல் கொப்பறையின்

(நெய்க்கொதிபோல் கொம்பூதிச் சங்கூதிக் கொண்டு கிளம்பிவிட்டார்! ஆற்றல் பெரிதுகாண்; எள்ளற்க ஆரியமே! அனைத்துலகும் இணைந்தெழுமுன் அகந்தை அகற்றுவிரே! மாற்றம் பெறுங்கள்;இலை மாற்றப் படுவீர்கள்! மாந்தரொடு மாந்தரென வாழ்ந்திருங்கள்; திந்திமிதீம்!

- 1970