பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

甘9

擂 .???

செகப்பிரியர் மில்டனெனும் ஆங்கிலத்துச் சிறந்துயர்ந்த இலக்கியங்கள் பற்பலவும் தேர்ந்துநாடி மிகப்படித்து முன்னேறிப் பதவிபெற்று மேனாடும் கீழ்நாடும் வரவேற்க மேவலுற்றுத் தகப்பலவும் சீர்பெற்று வாழ்ந்திடினும், திருக்குறளைத் தீண்டாத - உணராத - தமிழனைப்போய் மிகப்பெரியன் என்பதிலோர் பெருமையுண்டோ? மகிழ்ச்சியுண்டோ? தமிழ்க்குலத்திற் கெள்ளளவும் மேன்மையுண்டோ?

கல்லாத துறையெல்லாம், அறிவியலின் கூறெல்லாம் கணித்தறிந்து, பட்டம்பெற்று, யார்க்கும் எங்கும் இல்லாத பெருமையெலாம் புகழெல்லாம் இணைந்துவர வாழ்ந்திடினும், எந்தமிழின் மெய்ம்மை சான்ற சொல்லாலும் செயலாலும் தமிழ்ப்பண்பு மேவானைவிரும்பானை - ஒழுங்கழிந்த தமிழனைப்போய் வல்லானென் றெவ்வாறு வாய்கூசா துரைத்திடுவேன்? வாழ்த்திடுவேன்? வாழையடி வாழையென்பேன்?

ஏவலர்கள் கைகட்டி வாய்பொத்தி வரிசையுற நின்று,வருஞ் சொற்களெல்லாந் தலைமேல்தாங்கி மேவலுறும் படி,பதவி வாய்த்திடினும் செந்தமிழ்த்தாய்ப் புரந்திடுவார் தமையறிந்து, மேன்மை செய்யும் ஆவலிலான் - மனக்கசண்டை அகற்றலிலான் - ஆன்றதிறம்

அறிதலிலான் ஒருவனைப்போய் அறநூல் ஆய்ந்த

காவலனென் றெங்ங்ணம்யான் கழறிடுவேன்? போற்றிடுவேன்? - கணித்தமிழால் வாழ்த்தியுளங் களிக்குவேனே?

- 1971