பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

109

பேர்களெல்லாம் நடராஜா ஜெயலலிதா ஸ்வாகத்' பெயர்ப்பலகை அமெரிக்கா இலண்டனைப்போல் மின்னும்! சீர்திருத்தப் பேச்செல்லாம் 'வெங்காய' மணந்தான் ! சிண்டர்களின் வளர்ச்சி - ஸ்பிப்ர பாதம் ஸத் சங்கம்'

தேர் திருவிழாக்களிலோ நின்றவெலாம் ஒடும்!

தெருச்சுவரில் தமில் வால்க ! “எம்ஜியார் வால்க ! §

உண்ணுகின்ற விடுதிகளின் பலகாரம், சுவையில் - உருவத்தில் பழையவைதாம்; பெயர்ப்புதுமை அடடா! வெண்ணெயில்லை; 'பட்டர் உண்டு : 'பொட்டொட்டோ

" ... . . . - . (பொரியல் வெங்காயத் தோசையில்லை 'ஆனியன்தோ சைதான்!

உண்ணுதற்குச் சோறில்லை; ராரைசு' 'கி' தான்!

'பப்பட்' 'ஆனியன் புளவர் கூட்டாம் லைம் பிக்கிள்'!

தண்ணிர்இல் லை; வாட்டர் டொமொட்டோ சூப்; கர்டு';

தாழ்ந்துவிட்ட தமிழ் மொழியின் வீழ்ந்தநிலை காணிர்!

ث . سره کا

வானொலியில் 'அம்மாமி' அத்திம்பேர் கொட்டம் !

வாழ்க்கையிலே பாதியினை விழுங்கிவரு கின்ற பா நெளியும் திரைப்படத்தில் பம்மலக்கிடி கும்மா! படுக்கையறை, குளியலறை, நீச்சலுடைக் காட்சி!

தேன்ொலிபோல் பாவேந்தர் பாட்டெங்கோ வந்தால்

திரும்புகின்ற பல முகங்கள்; கசமுசப்புப் பேச்சு! கூனலுடல் ஆனாலும் கவர்ச்சி' க்கிலை கேடு! -குலைந்து வரும் தமிழகத்தின் கொடுமைநிலை காணிர்!

கல்விநலந் தேடுகின்ற மாணவர்கள் தம்மைக் கவலையொடு நினைக்கின்றேன்! என்னநிலை ஆமோ? செல்வநலம் மிக்கவர்கள் மேன்மேலும் வாழ்வார்; செத்தழியும் வெறும் வயிறார் தொகைபெருகிப் போனார்! வெல்வதினி எக்காலம், எந்தமிழர் நாட்டை? விளைந்து வரும் கொடுமைகளை ஒழிப்பதினி எந்நாள்? சொல்வதிலே பொய்யில்லை; அயல்நாடு சென்றீர்! சொந்தநிலந் திரும்பாமல் நினைந்துமகிழ் வீரே!

- #971 . .