பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#08

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

தின்னுமொரு கைச்சோற்றைப் பெரிதென்றே எண்ணித் தீய்க்கின்றான் தமிழ்நலத்தை சாய்க்கின்றான் குடியை! இன்னுமெவ்வா றெடுத்துரைப்பேன்; அம்மாவோ! அடடா! எடுத்தெறியும் எச்சிலைக்கே இனங்காட்டித் தந்தான்! 5

இப்படியாய்க் கீழ்ப்படியில் இருந்தபடி வாழும் இந்நாட்டுத் தமிழினத்தை விட்டயல்நா. டேகி அப்படியே பழந்தமிழ்வாழ் தமிழர்களாய் வாழ்வீர்! அடிவயிறுங் குளிர்ந்ததுகாண் உமையெண்ண எண்ண ! முப்படியாய் உயர்ந்து விட்டீர் உடன்பிறப்பீர்! நாங்கள் முதுகாட்டின் பழம்பினமாய் அழுகுகின்ற போழ்தில் கொப்படியில் முளைவிட்டுத் துளிர்க்கின்ற செடிபோல் கொழுந்துவிட்டே இலைவிட்டுப் பூவிட்டுக் காய்த்தீர்! 6

காய்த்தகுலை கிளைகனக்கக் கனிந்துவர லானர்;. கண்குளிரக் காண்கின்றேன்; உம் வளர்ச்சி. கோடி சாய்த்ததலை நிமிரவில்லை தமிழ்நாட்டில் தமிழன். சாகடித்தே இழுத்தெறியக் குறிபார்ப்பார் பகைவர்; ஏய்த்தநிலை மாறி,அவர்க் கேறுநிலை இன்றே! எந்தமிழர் தம்கணக்கோ என்னவென்று பார்த்தால், வாய்த்தகுலை கோடி அதில் அழுகல்,அரைக்கோடி! வாகாகப் பழுப்பதெல்லாம் பத்திலக்கத் தொன்றே! 7

தமிழ்நாட்டைத் தமிழமைச்சன் தான் ஆளுகின்றான்.

தமிழமைச்சர் தாம்,அரசை வழிநடத்திப் போவார்! . தமிழ்நாட்டின் பெயர்மாற்றம் செய்ததுதான் மிச்சம்!

தமிழ்மொழியின் வளர்ச்சியிலோ அப்படியப் படியே! தமிழ்நாட்டுத் தாளிகைகள் தமிழ் மொழியைக் கொல்லும்! தமிழ் எழுத்தில் அச்சுவரும்; நரகல்நடைப் பேச்சு! தமிழ்நாட்டில் தமிழரில்லை; இருந்து அவர்வாய் திறந்தால் தமிழ்மணப்ப தில்லை:ஐயோ! பிறமொழித்தி நாற்றம்! 8

ஊர்களெல்லாம் சிரங்கம் விருத்தாஜ லந்தான் உடைகளெல்லாம் 'மினிஸ்கர்ட்டும், 'கவுனும், டைட்'

- (பேண்ட்'டும்!