பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி:

பிரெஞ்சுக் காரன் யாவரும் முறையே அரசாண்ட பின்னை ஆங்கிலன் வந்தான்! 1 ՅՅ அதற்குள் உன்றன் அடிநிலை மறந்தது. உதைகள் வாங்கி வாங்கி உன்றன் தோலும் மரத்தது, தோள்கள் சூம்பின:

காலும் மடிந்தது: கைகளும் ஓய்ந்தன! ஆகவே கிண்ணிச் சோற்றுக் கலைந்தாய்! சாகக் கிடந்தவன் உன்றனைச் சாகாது காத்ததும், கல்விக் கண்ணைத் திறந்ததும், மீத்த தடயத்தால் பழம்வரலாறு ". . . . காட்டி, மொழித்திறன் கணித்ததும், உயிர்ப்பின்ை மீட்டுக் கொடுத்ததும், பார்ப்பன மேட்டிமை # jū வீழ்த்தி உனக்கு விலக்குக் கொடுத்ததும், தாழ்த்திய உன்றன் தலையை நிமிர்த்த்தும் ஆங்கி லேயனே! -

. ஆயினும் வடவன் தூங்கிய உன்றன் தொடையிலே கயிற்றை நன்றாய்த் திரித்தான்; நாடு பெறுகையில் "ஒன்றே யாமென உன்னையும் இணைத்துப் பொன்றா உன்றனிப் போக்கைத் தடுத்துத் தமிழ அம்மியை வடக்குக் குழவியால் திமிறத் திமிற அரைத்துத் தேய்க்கிறான்: அம்மி தேய்ந்தபின் முதுகிலும் அரைப்பான்!. 120 உம்மென நீதான் ஊங்கொட் டுவையே!

இத்தகு போக்கில் மொழியையும் இழந்து மொத்தமாய் உன்றன் மூளையும் இழந்து, சொத்தெலாம் இழப்பாய் என்றே சொன்னால், செத்தையும் சருகும் செருப்பும் போல - ஒத்துழைப் பதுவே ஒற்றுமை என்பாய்: மெத்தவும் உன்றன் மேனிதடித்தது!. 1. செத்தை - குளிர் காய்பவனுக்கு உதவுவது. 2. சருகு - எருவாட்டி தட்டுவோனுக்கு உதவுவது. 3. செருப்பு-மிதிப்போனுக்கு உதவுவது, . . . .