பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

கனிச்சாறு இரண்டாம் தொகுதி

தோற்றிட வேண்டும் என்பையேல் அரசினை

மாற்றிட வேண்டும்! இந்நிலை மறுத்தே ஒற்றுமை ஒற்றுமை என்றே உரைப்பது வெற்றுரை மட்டு மன்றே; வினுரை!

ஒன்றை மட்டும் நினைவில் ஊன்றுக. என்றைக் கென்னினும் எவரிடத் தென்னினும் அரசியல் நலன்கள் ஆயிரம் வரினும் - பொருளியல் நலன்கள் பூத்துக் குலுங்கினும் உரிமை யில்லாத் தமிழகம் தமிழர்க்குக் - கருவில் லாத கழிநிலை மலடி!

துறக்கமே எனக்குச் சிறையாக வாய்ப்பினும் இறப்பத் தாண்டிக் குதிக்கவே விரும்புவேன் எனுமோர் அறிஞன் இயம்புதல் தெளிவாய்! பினுமுன் பேதைமை பேசுவ தொழிவாய்!

ஆகவே தமிழனே அழைக்கின் றேன்,உனை: சாகவே என்னினும், விடுதலைச் சாவே! - இன்றைத் தமிழகம் அடிமைவிட் டெழுந்தால் பின்றைத் தமிழகம் பெரும்பயன் எய்தும்! -

உன்னை விடுதலைக் கொப்புவித் திடுக! அன்னை நாட்டினை விடுதலை செய்க! - முன்னைப் பெரும்புகழ் உலகெலாம் முழக்குக!

"என்னைக்கும் என்னை இனத்திற்கும் என்னைப்

பின்னைக்கும் யானே பெரும்புகழாம் நின்றே"னென்

நன்னைக்கும் சொல்லி அத்தனுக்கும்சொல்லி, உன்னைக்கும் உன்னின் உழைக்கும் உறவுக்கும் பன்னி யுரைத்துப் பலவா றெடுத்துரைத்து மின்னிப் புறப்படுக மேனிலையை - உன்னி நடத்திடுக, உறுபயன் விளையவே!

160

170

180

- 1972