பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

89

145.

மொழியினை இழந்துவிட்டான் - பல மூடப்பழக்கங்கள் கொண்டுவிட்டான்; - வந்த வழியினைத் துறந்துவிட்டான் - தான் வாழ்ந்திட அடிமையாய்த் துணிந்துவிட்டான் - எனும் பழியினை நினைத்து விட்டேன். - இப். - பாழ்.மனம் எனைநொடி விடுவதில்லை - இந்த இழிவினைத் துடைப்பதற்கே - எனை. இராப்பகல் தூண்டியே அலைக்கழிக்கும்! - வேறு எனக்கென எதுவுமில்லை! - இந்த இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர:

- 1975

മാതൃ ఇE öᏡa பார்த்திடலாம்.

எனக்குத் தெரியும், இந்தத் தமிழன் என்றைக்கும் உருப்பட மாட்டான்' என்பது! தனக்கும் உதவான்; தமிழ்க்கும் உதவான்! தன்னின நன்மைக்கும் நாட்டுக்கும் உதவான்! திருப்பம் இலாமல் சென்ற திசையிலே தேடியும் ஒடியும் தேம்பியுந் திரிவான்! இருப்பினும் ஒருகை பார்த்திடலாம்; - மன எழுச்சியை அவன்பால் சேர்த்திடலாம்!

எனக்குத் தெரியும், இந்தத் தமிழன்

என்றைக்கும் திருந்திட மாட்டான் என்பது:

மினுக்கத் தெரிந்துளான் மெலுக்காய்த் திரிவான்!

மெப்புக்கே உழைப்பான்; உப்புக்கும் அலைவான்; காயினும் காய்வான்; நனையினும் நனைவான்!

கடுமையாய் உதைப்பார்க்கு அடிமையாய்க் கிடப்பான் ஆயினும் ஒருகை பார்த்திடலாம்: - அவன், அடிமைக் குழியைத் துர்த்திடலாம்: