பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 ஆயிரம் பேர் சேர்ந்தால் அனைத்தும் நடக்கும்!

நல்ல மனம்பல தேவை! - இந்த f நாலரைக் கோடித் தமிழரைக் காக்க! சொல்லும் செயலும் பொருந்தும் - பல சோர்வற்ற உள்ளங்கள் பற்பல வேண்டும்!

அல்லும் பகலும் நினைக்கும் - பல ஆர்வங்கொள் 2 நெஞ்சங்கள் ஒருங்குறச் சேர்ந்து வெல்லும் வினைகளைத் தேடும் - உயிர் வேட்கை முனைப்புள்ள வேங்கைகள் தேவை!

தன்னல நாட்டமும் இன்றி - ஒரு 3 தலைமைத் துடிப்பும் பொறாமையும் இன்றிக் கன்னல் தமிழ்நலம் காக்கும் - உயர் காதல் இளைஞர்கள் இளைஞைகள் தேவை!

ஒப்பிய கொள்கையில் ஒன்றி - உடல் 4 உயிரைத் தருகின்ற வீர உணர்ச்சி, செப்பிய கட்டளை யேற்றே - உடன் செய்கின்ற ஆர்வத் துடிப்புடை யோர்கள்,

முப்பது பேர்கள்ஒர் ஊர்க்கு - வந்து 5 மூளுவ ராயின்இங் காளுவர் காதில் எப்புதுக் கொள்கையும் ஏறும்! - அதை ஏற்றில ராயிடின் ஆட்சியும் மாறும்!

ஆங்கிலம் பிழைபடப் பேசில் - பலர் 6 அருவருப் படைகுவர்; ஆயின்செந் தமிழில்,

தீங்குளங் கொண்டவர் சில்லோர் - பிழை. சேர்ப்பதை நமில்சிலர் மார்தட்டிக் கேட்டால்,

பாங்குறும் செந்தமிழ் தாழ்ந்து - பல 7 பட்டடைப் பழங்கடைக் குப்பையைப் போல

f48