பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

164

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

மொழியைச் சிதைத்தாய் விழியிழந்தாய்! - நலம் முழுதும் அழிந்தாய் பண்பிழந்தாய்! - .* - பழியைச் சுமந்தாய்; அரசிழந்தாய்! -பெரும். பகட்டில் திரிந்தாய்; புகழிழந்தாய்! . - - - குழியைக் குன்றெனக் கால்வைத்தாய்! - உயர் கொள்கை தவிர்த்தாய் குழிவிழுந்தாய்! . வழியைப் பற்றி வருவாயோ? - நல் வாழ்வும் பெற்றே உயர்வாயோ?

- 1980

இன்றுள்ள நிலையில் எவ்வகைத் தொண்டும் பயனளிக்காது!

செய்தியிதழ் நடத்துகின்ற திருகுதா ளக்காரர் செந்தமிழைத் தீய்க்கும் மட்டும் -

பொய்தெறிக்கப் பேசுகின்ற அரசியல் எத்தர்களின்

புரட்டுகள் ஒழியும் மட்டும் - எய்திவரும் பொதுமைநலன் சீர்திருத்த மேம்பாடும் இற்றிற்று வீழ்வதல்லால், உய்தியில்லை செந்தமிழ்க்கே உருவாகும்.தமிழர்நலம் உருப்படப் போவ திலையே! .

சோற்றுக்கும் காசுக்கும் சொல்மாறி அறிஞர்குழாம் சொந்தநலன் பேணும் வரைக்கும் - கூற்றுக்கும் கொடியவராய்த் தலைவர்களின் கோமாளிக் கொடுவினைகள் தீரும் வரைக்கும் - ஆற்றிவரும் தமிழ்த்தொண்டில் ஆகிவரும் சிறப்பியல்கள் அற்றற்று வீழ்வ தல்லால், மாற்றமில்லை தமிழ்நாட்டில்! மதிப்பில்லை செந்தமிழ்க்கு மக்கள் நலம் சேர்வ திலையே! - " -- - -

- 1980