பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

18t

தமிழர்க்கு அறிவைத் தந்திட வில்லையா? தமிழர்க்குத் தன்மானம் ஊட்டிட வில்லையா? தமிழின உணர்வைத் தட்டி யெழுப்பி அமிழாத இனநலம் ஆக்கிட வில்லையா? ஆரியர் செய்த அழிம்புகள் யாவையும் கூரிய உரைகளால் கொன்றிட வில்லையா? பார்ப்பனச் சூழ்ச்சியைப் பகுத்துக் காட்டி ஆர்ப்புற் றெழும் உணர் வளித்திட வில்லையா? ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாக நாயினுங் கேடாய் நந்தமிழ்ப் பேரினம் நலிக்கப் பட்டும் நசுக்கப் பட்டும் மெலிக்கப் பட்டும் மேலே றாமல் கிடந்த கீழ்மையைக் களைந்து காட்டி அடர்ந்தவர் எழுந்திட அளிதர வில்லையா? பெரியார் உரைகளும் பெறற்கருந் தொண்டும் உரிய பொழுதில் உதவிட விலையெனில் தமிழினம் விழித்திடும் தகைவுநேர்ந் திருக்குமா? ஆரியச் சேற்றினுள் அழுந்தித் தமிழன் வீரியம் குன்றி மூச்சு விளர்ந்து - புதைக்கப் பட்டுப் போயிருக் கானா? சிதைக்கப் பட்டிருக் காதா அவன் இனம்? இவையெலாம் நேர்ந்திட வில்லையே என்ற நவையுறு ஏக்க நலிவினால் அன்றோ காஞ்சிச் சின்னவாள் கதைத்துத் திரிகிறார்? பூஞ்சையாய்ப் போன புல்லுரை புகல்கிறார்: பெரியார் ஊன்றிய நச்சு விதைகளால் அரிய விளைவே அற்றுப் போகி. .* நாடே கெட்டு விட்டதாய் நவில்கிறார்!. நாடென்ன இவரது பாட்டனின் ஈட்டிமா? நாடு கெட்டால், நமக்கிது தகாதென

ஒடிட வேண்டுவ தன்றோ உயர்ந்தது!

f

G

0

1 10

720

130