பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

188

கொடும் வறட்சி உற்றதுவோ - நல்லறிவு செயற்கே!

உளந்திரிந்து சொல்திரிந்து செயல்திரிந்து போன உலுத்தரிடை மொழிநலமும் இனநலமும் கூறி - வளந்தெரிந்து பொதுநலத்தைப் புதுக்கிடுவீர் என்றால் வருகின்ற அன்பரெலாம் முகந்திரிந்து செல்வார்! களந்தெரிந்து முனைந்தாலும் கடுகுவிளை வில்லை! காதுபட உரைத்தாலும் செவிதருவார் இல்லை! குளந்திரிந்து நீர்வற்றிப் போனதுபோல் நாட்டில் கொடும்வறட்சி யுற்றதுவோ நல்லறிவு செயற்கே!

- 4933