பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

仑5

190

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

பெரியார் உணர்வினைப்பாவேந்தர் பீடினை அறியாத் தமிழராய், ஐயகோ, அழிகிறோம்! தமிழர் இனமே! தாழ்ந்துபோம் இனமே! : இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும் அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே!

- 1983

என்னினும் என்ன, இன்று இவர்கள் அடிமைகள்!

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்! தென்னன் பாண்டியன் குமரிக் குடிம்ையர் : திசையெ லாம்பரந் துலகை அளந்தவர் ! இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்: இந்திய - நாவலந்தேயத்து இறைமையர் ! என்ன வியப்படா? - இவர்கள் தமிழர்கள்! என்னினும் என்ன, இன்றிவர்கள் அடிமைகள்!