பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

198

இவர்க்கிடையில் வரும்விளைவு தழைப்ப தென்றோ?

தமிழினத்தின் ஒருசாரார் பார்ப்பனர்க்கும் வடவர்க்கும் தமையடிகு வைக்கும்தன் மான மற்றோர்; தமிழினத்தின்னொருசாரார் தமிழரையே அரசியலால் சுரண்டியுண்ணும் தாய்க்கொலைஞர்; மற்றோர் சாரார், தமிழினத்தில் தாம்பிறந்தும் தமிழரையே எதிர்க்கும், இனப் பற்றில்லா உட்பகைவர்; பிறிதோர் சாரார், தமிழினத்தின் முன்னேற்றம் கருதுவரைத் தந்நலத்தால் புறங்குத்திக் கட்டழிக்கும் தாழ்மை யோரே!

தமிழினத்தின் தாழ்ச்சியினை-வரலாற்றின் வீழ்ச்சியினை

அவைeட்கும் மீட்சியினை - எண்ணி டாமல், தமிழினத்தின் அறியாமை, மெலிவுள்ளம்-எனுமிவற்றைக் காசாக்கும் கலைக்கயவர் - இன்னோர் சார்ார்:

தமிழினத்தை உள்ளரித்தே உயிர்ப்பழிக்கும் மதக்கேடர்,

சாதிவெறி கொண்டவர்கள் வேறோர் சாரார்:

தமிழினத்தை மீட்டெடுக்கும் உறுதியினார்க் குரமழிக்கும் இவர்க்கிடையில் வரும்விளைவு தழைப்ப தென்றோ?

- 1985