பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

197

என்று நினைப்பாயோ?

என்று நினைப்பாயோ? - இன ஏற்றம் விளைப்பாயோ? - தம்பி அன்று பிறந்த நம் செந்தமிழ்க் காக்கம் என்று நினைப்பாயோ? - இன ஏற்றம் விளைப்பாயோ?

நன்றெண்ணிப் பாரட்ா தம்பி! - தமிழ் நாடின்று உலகினில் தாழ்ந்தது வெம்பி! இன்றதை உயர்த்தாமல் போனாய் - நீ இருந்ததைக் கதையென்று படிப்பார்கள் வீணாய் ! (என்று) குன்றதும் தாழ்பள்ளம் ஆகும் - பலர் குழிவெட்டி மண்கொண்டு கல்கெர்ண்டு போனால்! வென்றவர் தோற்பதோ, இங்கே உன்

வீரமும் விளைவதும் போயின எங்கே? (என்று)

மொழியினை இனத்தினைக் காப்பாய் - நம் மொய்ம்பினை நாட்டினை இன்றே நீeட்பாய்! விழியினை ஒப்பது மொழியாம் - அது வீழ்ந்திடில் தாழ்ந்திடில் நமக்கேது வழியாம்! (என்று)

- 1985