பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

அரத்தமும் மாறி, எண்ண. ஆழமும் குறைந்து, தக்கை மரத்தினில் செய்த பாவை மாந்தரை எழுப்பிப் போக்கு வரத்தினில் வீர ராக்கும் மந்திரப் பாடஞ் செய்யும் - உரத்தினில் உழன்று கொண்டா - உயிர்க்கின்றாய், தமிழ நெஞ்சே!

துலங்கட்டும் தமிழும் வாழ்வும் துய்க்கட்டும் உரிமை என்றே, குலங்கெட்டு நினைவும் கெட்டுக் குழிக்குப்போய் மண்ணும் தின்ற புலங்கெட்ட தமிழ்க்கூட் டத்தைப் புதுக்கவா இதுநாள் மட்டும் நலங்கெட்டு வாழ்வும் கெட்டு நலிகின்றாய், தமிழ நெஞ்சே!

- 1985