பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

212

இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர், அவர்!

நெருப்பினில் தமிழினம் வெந்துகொண் டுள்ளது; நேற்றைய வரலாறு மறைந்துகொண் டுள்ளது! தெருப்புறம் தமிழர்க்குள் கூச்சலும் குழப்பமும்! தேர்தலில் வெல்பவர் யார்-எனும் போட்டிகள்! உருப்பெறும் வகையினில் ஒருவரும் இல்லைதான்! உண்மையும் நேர்மையும் உலவிடா நிலைமைதான்! இருப்பினும் கலைஞரே தமிழினம் காப்பவர் எரிகின்ற கொள்ளியில் எதிரிக்கு நெருப்பவர் !

அரசியல் விரகரே அனைவரும்; உண்மைதான்! ஆட்சிக்கு வந்த பின் மாறுவார்! மெய்ம்மைதான்! உரசிப் பார்த்திடில் ஒருவரும் இல்லைதான்! ஊரடி கொள்ளையில் உலைவேகும் காட்சிதான்! வரிசையை அளந்திடில் வாய்பேச்சுக் காரர்தாம்! வந்தபின் ஆட்சிக்கு வருவாயே கொள்கைதான்! முரசொலிக் கலைஞரே, இருப்பினும், மேலவர் 1 முத்தமிழ் எதிரிக்கு என்றுமே வேல், அவர் !

இனநலம் காப்பதாய் எல்லாரும் சொல்கிறார்! இனிமைப் பேச்சினில் எல்லாரும் வெல்கிறார்: மனநலம் இருந்திடில் அல்லவோ மக்களின் மாண்பினைக் காத்திட எண்ணுவர்! தமிழரின் முனைநலம் யாவுமே பறிகொண்டு போயினர் !. முன்நிலம் மீட்பதில் எவருமே முனைந்திலர்: ' இனநிலை உணர்ந்ததைக் காப்பதற் கெவருளர்? இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர்-அவர் !

- 1988