பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 .

217

தூய்தமிழ்க்கும் இனத்திற்கும் தொண்டாற்றும் அன்பரெவர் ?

அரசியலைச் சார்ந்தோர்கள் அருந்தமிழ்க்கும் இனத்திற்கும் ஆக்கம் எண்ணார்; முரசறைதல் பெரிதாக இருந்தாலும் பதவிநலம் முதலாய்க் கொள்வார்! கரிசனமாய்த் தமிழ்கற்ற புலவோரும் அறிஞர்களும் கற்ற வற்றால் பரிசளிப்பும் பாராட்டும் பல வெண்ணும் தம்நலம்ே பார்த்தி ருப்பார்!

வாணிகர்க்குப் பொருள் நாட்டம்! வாழ்கலைஞர் எல்லார்க்கும். வருவாய் நோக்கம்! காணியுழும் உழவர்க்குக் கணித்தமிழும் இனநலமும் கரும்பா? நெல்லா? - ஏணியெனும் பொருளியலால் ஏற்றம் நினை தொழிலாளர்க் கினமா கொள்கை? துணிகர்க்கும் அன்பரெவர் தூய்தமிழ்க்கும் இனத்திற்கும் தொண்டாற் றற்கே?

- 1990