பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

216

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

வன்மையும் கொண்டராய் வதைபடப் பழமையும் கிளறுவர்! நெஞ்சமும் கொதித்திட நீர்மையும் புகைந்திட நெருக்கடி பற்பல புகுத்துவர்? வெஞ்சமர் பொதுவினை! வீரராய் நிமிர்ந்ததை நிகழ்த்துவீர்! அவை புறந் தள்ளுவீர்!

- #989

கட்சியரசியல் ஒழிகவே!

தெருச்சண்டை போடுகின்ற அரம்பர்களும் வம்பர்களும் சட்டமன்றத் துட்பு குந்தே, கருச்சிதைவைக் கிளறுதில்போல், கழிவறையை அலசுதல்போல் கயமைச்சொல் புழங்கு கின்றார்! உருச்சிதைய ஒருவரைமற் றொருவர் அறத் தாக்கிக்கொண் டாடுகின்றார் ஆட்டம்! ஐயோ! எருச்செறிவாய் இடவேண்டும். மக்கட்கே: இல்லையெனில் மாக்களைத்தாம் பெறுவோம் இங்கே!

மக்களினை ஆளவந்தார் மாக்களென . இழிவாக நடப்பதுவோ, மானம் இன்றி? தக்கபடி கல்வியொடு பண்பாடும் ஒழுக்கமும்மிக் கோங்கியவர் ஆட்சி ஏற, ஒக்கபடி நாம் எண்ணி ஒப்போலை . இட வேண்டும்; அல்லாக்கால் தவிர்க்க வேண்டும்!

செக்கடியில் நாய்படுத்தே என்னபயன்?

சிந்திப்பீர்! கட்சியர சியல்ஒ ழிகவே!

- 1989