பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சாதீர்!

எடுப்பு உள்ளங் கொதித் தெழுவீர் - உணர்வு ஊற்றுப் பெருக்கினைப் போலப் பெருகியே (உள்)

தொடுப்பு பள்ளிக் குழந்தைகள் உள்ளத்திலே - குலப் பாகுபாட் டெண்ணத்தை ஊன்றிடவே துள்ளிக் குதித்திடும் மண்டைகளை - நூறு து.ாளாகச் செய்வதற் கெண்ணங்கொண்டே (உள்)

பிள்ளைகளைத் தமிழ்க் கிள்ளைகளை - கொடும் பேய்மனங் கொண்டவர் முன்தொழிலைக் கொள்ள விளைப்பது நல்லதுவோ - பூணுற் கூட்டங்கள் செய்திடுந் தீமைகண்டே (உள்)

பயிர்த் தொழில் செய்பவர் பிள்ளைகளை - மேலே படிக்க விடாமலே தடுத்ததன் பின் உயிர்த் தொழில் மருத்துவர் பிள்ளைகளை - உயர் வொன்றுமில் லாமற்செய் திட்டங்கண்டே (உள், !

நீதி மனுப்படி சூத்திரர்தம் - மக்கள் நீசத் தொழில்களைச் செய்திடவும் வேதியர் செய்திடுந் தீங்கு கண்டு - மிக வேதனை யோடொன்று கூடிநின்றே , (உள்)

அச்சமுறுத்துவர் ஆட்கொல்லுவர் - பின்பு ஆறேழு மாதஞ் சிறை கொடுப்பர் நச்சுத் தனமான தீமை செய்து - தமிழ் நாட்டாரை மாடுபோ லாக்குமுன்னே (உள்)

கள்ளவுள்ளத் தோடு காட்டரசை - எங்கும் காணாத சட்டம் வீண் திட்டங்களை தெள்ளத் தெளிவுடன் கண்டுவிட்டோம் - இனித் தீரமுடன் செய லாற்றிடவே - - - - - - - - -- (உள்,