பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

அஞ்சாதீர் அஞ்சாதீர் தோழர்களே - நம்மை யாள நினைப்பவர் தாமொரு நாள் பஞ்சாகித் தூளாகிப் போவதுண்டு - நம்மின் பாதந் தொழுவது உண்டெனவே! (உள்)

- 1953

ஆர்த்திங்கு வம்மினோ

வம்மின் தமிழ்ப்புலவீர்! மாணவரீர்! வல்லுணர்வீர்! அம்மையீர்! ஆடவரீர்! ஆர்த்திங்கு வம்மினோ! செம்மைசேர் வாழ்வைத், துலங்கு மணிச்சுடரை, நம்மை வளர்த்த நறுஞ்செவிலித் தாய்மணியை, மம்மர் அறுக்குமொரு மாமருந்தைச் செந்தமிழ்த்தாய் தம்மை, வளர்த்துத் தழையவழி செய்வோமால் மும்முறையுஞ் சூளுரைத்தோம்; மூச்சறுக்க நாந் துணிந்தோம்; எம்மையருந் தொண்டிற் கெருவென்றோம்" என்பீரே!