பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

44

56স্টো6fেiা - 5.Jীি!

முந்தையொரு பழம்பொழுதில் முகிழ்த்தலர்ந்து விரிந்துயர்ந்த அந்தமிழை உட்பொதிந்துன் ஆவியெனக் காத்தனையே; அந்தமிழை உட்பொதிந்துன் ஆவியெனக் காத்ததெலாம், இந்தியெனும் புலைமொழிக்கே ஏவல்செயும் இழிதகைக்கோ? |

திக்கெட்டும் மணங்கமழ்ந்து தெளியார்க்கிங் கொளியேற்றும் முக்கழகச் சீர்சுமந்த முதுநூற்கள் யாத்தனையே! முக்கழகச் சீர்சுமந்த முதுநூற்கள் யாத்ததெலாம், புக்கவரும் இந்தியெனும் புன்மொழிக்குக் காவிடவோ? 2

'எமையாவன் அறம்பழித்தான் என்றவரை வென்றுவர இமையாவெண் பனிமலைக்கல் இவர்ந்துபுலி நாட்டினையே; இமையாவெண் பனிமலைக்கல் இவர்ந்துபுலி நாட்டியது, நமையழிக்கும் வடவர்க்கே நாயடிமை செய்திடவோ? 3

அறம்பிழைத்த மனுநூலை அழித்தொழித்துத் தவறிழையாத் திறம்படைத்த திருக்குறளைச் செய்தளித்துப் பேணினையே;

திறம்படைத்த திருக்குறளைச் செய்தளித்துப் பேணியது,

மறம்படைத்த இந்தியெனும் மந்தியின்கைத் தந்திடவோ?

இன்மையினார்க் குள்ளிரங்கி, இரவலரைப் பரிந்தேற்றுப் புன்மையினார் தமையழிக்கப் போர்போரென்

(றார்த்தனையே; புன்மையினார் தமையழிக்கப் போர்போரென் றார்த்ததெலாம், வன்மையினால் அரசமைத்த வடவரடி தொழுதிடவோ?

திகழ்ந்தொளிர்ந்த செந்தமிழ்த்தாய்த் திருவடிக்கீழ் அரசமர்ந்து - புகழழிக்கும் புல்லர்முன் புலியெனநீ பொங்கினையே; புகழழிக்கும் புல்லர்முன் புலியெனநீ பொங்கினதிங் கிகழ்சேர்க்கும் இந்தியினுக் கிருந்தடிமை புரிந்திடவோ? 6