பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

யாப்பால் பரவி இசைதந்த யாழே; நீயே நினைமறந்தால், காப்பார் யாவர் கொழுந்தமிழைக் கண்ணுள் மணிக்கே இணைவைத்தே?

பரப்பார் நிலமும் புகழ்பரப்பிப் பரவா உளமும் கனல்பரப்பும். வரப்பார் நெறிநூல் பலசாற்றி, வந்தாய் ! தமிழா, உனைவிளிப்பேன்; வரப்பார் நெறிநூல் பலசாற்றி, வந்தாய்! நீயே நினைமறந்தால், புரப்பார் யாரிங் கொளிதமிழை; - பொருள்,மெய், ஆவிக் கிணைவைத்தே?

பனையார் தோளும், உணர்நெஞ்சும்

பணிசெய் முனைப்பும் விறல்வேந்தும், புணையாய் இருந்தே தமிழ்புரந்த

புலியே! ஒருசொல் உனைவிளிப்பேன்.

புணையாய் இருந்தே தமிழ்புரந்த் புலியே, நீயே நின்ைமறந்தால், துணையார் இனியே தீந்தமிழ்க்கே,

தொலையா வாழ்விற் கிணைவைத்தே?

13

14

15

- 1963