இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32.
33
பகையே விலகுக!
ஆர்த்த முரசொடு கொம்பும் முழங்க அருந்தமிழர் சீர்த்தி விளங்க நெடுங்கொடி தூக்கிச் செறுவிழிவேல் கூர்த்த மறவர் களிற்றொடும் போந்தார்! குலைநடுங்கிப், போர்த்த இருளே, பகையே, விலகுக பொக்கெனவே! -
- 1963
அடிமைக் கூட்டம்!
- நாயடிமை செய்பவராய்த் தமிழரெல்லாம்
நலிகையிலே, அமைச்சரெல்லாம். போயடிமை செய்கின்றார் வடவர்க்கே: அவர் வாய்ச்சொல் தலைமேற் கொண்டே! வாயடிமை கொண்ட தமிழ்த் தல்ைவரெல்லாம் முழங்கிடுவார் வளர்ச்சி காணார் . . . . . தாயடிமை புறக்கண்டும் அவள்மானம்
விலைபோக்கும் தகைமை யோரே!
- 1964