இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34
35
53
தமிழ் வளர்ப்பார்...!
நயங்கர் உரைகள் பலசெய்வார்; நலங்காண் வினைக்கே முழுமனதாய் இயங்கார்; பிறர்.ஆங் கெழுந்தியங்கின் இணையார்; ஒருகால் இணைந்துவிடின் வயங்காண் பொழுதில் பொருள்நயப்பால் வழிப்போ வார்க்கே பழிசெயவும் தயங்கார்; இவர்காண் தமிழ்வளர்ப்பார்!
தமிழே ! இதுநின் தலையெழுத்தே!
- 1954
எழுதிப் பிழைக்கும் இடக்கர்!
பழுதுற நூற்கள் பதித்திடு வாரும் பதித்தவெல்லாம்
புழுதியென் றாலும் புகழ்ந்துரைப் பாரும் புகழ்ந்தவற்றைத் * . . தொழுதுடன் வாங்கிப் படித்திடு வாரும்
தொலைந்துவிட்டால் , எழுதிப் பிழைத்திடு வாரோ இடக்கரும்
இந்நிலத்தே!
- 1964