பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

35

53

தமிழ் வளர்ப்பார்...!

நயங்கர் உரைகள் பலசெய்வார்; நலங்காண் வினைக்கே முழுமனதாய் இயங்கார்; பிறர்.ஆங் கெழுந்தியங்கின் இணையார்; ஒருகால் இணைந்துவிடின் வயங்காண் பொழுதில் பொருள்நயப்பால் வழிப்போ வார்க்கே பழிசெயவும் தயங்கார்; இவர்காண் தமிழ்வளர்ப்பார்!

தமிழே ! இதுநின் தலையெழுத்தே!

- 1954

எழுதிப் பிழைக்கும் இடக்கர்!

பழுதுற நூற்கள் பதித்திடு வாரும் பதித்தவெல்லாம்

புழுதியென் றாலும் புகழ்ந்துரைப் பாரும் புகழ்ந்தவற்றைத் * . . தொழுதுடன் வாங்கிப் படித்திடு வாரும்

தொலைந்துவிட்டால் , எழுதிப் பிழைத்திடு வாரோ இடக்கரும்

இந்நிலத்தே!

- 1964