பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、54

தமிழனுக்கு ஒப்பாரி!

ஐயோ தமிழ்மகனே! ஆண்டிருந்த மன்னவனே; பொய்யோ புதுக்கனவோ? போகா நெடுநினைவோ? மெய்யாய் நடப்பதுவோ மேனிச் சிலிர்சிலிர்ப்போ? உய்யாய் எனநினைந்த ஊரார் களிப்புறவே.வாழாய்நீ என்ற வடவர் மகிழ்வுறவே - விழாயோ என்றிருந்த வேறார் உவப்புறவே, சாய்ந்தாயே! ஆலஞ் சருகாய் விழுந்தாயே! வாய்ந்த பெருமையெலாம் வாயெடுத்துப் பாடிடுவேன்; வாய்ந்த பெருமையினை வாயெடுத்துப் பாடிடுங்கால், மாய்ந்த உயிரும் மறிக்கவந்து தங்கிடுமா? 1 to மாய்ந்த உயிரும் மறிக்கவந்து தங்குமெனில் தோய்ந்த நறுந்தமிழில் தோதாகப் பாடேனோ? கன்னல் தமிழில் கனிவாகப் பாடேனோ? என்னேர் தமிழில் இசையேறப் பாடேனோ? சொல்லுக்குச் சொல்லும் சுவையேறப் பாடினமால் கொல்லவரும் அம்பும் குறிதப்பிப் போகாதோ ? வெல்லவரும் மாற்றாரும் வில்லொடிந்து போகாரோ? வல்லதடா நின்நினைவும் வாழ்க்கைக் கெருவாகும்!

பாண்டிமன்னன் பெற்ற பழமேனி நின்மேனி! ஆண்டவனும் நீயே! அரசரெலாம் நின்குடியே! 2 {} சோழமன்னன் பெற்ற திருமேனி நின்மேனி, வாழவந்தாய் நீயே, வடவர் குறிதொடுத்தார்.

சேரமன்னன் பெற்ற சிறப்பெல்லாம் நின்சிறப்பே ! சீரவிந்து போனாய், சிறப்பிழந்து வீழ்ந்துவிட்டாய்!

தப்பாக் குறிவைத்தார்; தாழாமல் அம்பெடுத்தார்; எப்பாலும் சூழ்ந்தவரை என்செய்வார் என்றிருந்தாய்.

மாறாக் கவணெடுத்தார்; மாய்க்காமல் மாய்த்துவிட்டார்; வேறாய் நினைக்கவில்லை; வீணரவர் வீழ்த்திவிட்டார்! வெல்வார்ோ என்றிருந்தாய் ഖേജി- நீமறந்தாய்! கொல்வாரோ என்றே குறிவைக்க நீமறந்தாய்! 30

முத்தளந்த கையில் -முடியணிந்த நின்தலையில்

பத்தும் அளந்துதந்து பாமடுத்த நின்செவியில் -