28
திருக்குறள்
தமிழ் மரபுரை
ளிலும் சில வடசொற்கள் புகுந்துவிட்டன. அவை அந்தம், அமரர், அவி, அன்னம், ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், உல்கு, கணம் (க்ஷணம்). காரணம், சலம் (வஞ்சனை) நாமம் (பெயர்). பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே; ஆரிய வெறியர் கூறுவது போல் ஐம்பதல்ல.
அப் பதினேழேனுள்ளும் அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே.
அல் - அ.மடி - மரி - மரர்.
கரணம் - காரணம் (வ.). கரு + அணம் - கரணம் = செய்கை, செய்கைக் கருவி. கருத்தல் செய்தல். இது ஒரு வழக்கற்ற வினை.
பகு - பக்கு - பாக்கு = பகுதி. பாக்கு - பாக்கியம் = நற்பகுதி, நற்பால், நற்பேறு.
விழித்தல் = கண்திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு. விழி - விடி - விதி வித் (வ.) - வித்தக.
அதி என்பது அதை என்னும் சொல்லிற்கினமான வழக்கற்ற தமிழ் வினைச்சொல். ஆயம் என்னுஞ் சொல்லின் முதனிலையான ஆ என்பது வா என்பது திரிபு.
குணம், நிச்சம் என்னும் இரண்டும் தென்சொல்லே. கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல். கொள் - கொள்கை = இயல்பு. கொள்- கோள் = தன்மை. கொள் - கொண் - (கொணம்) - குணம் = கொண்ட தன்மை, தன்மை.
இச் சொற்கு வடவர் காட்டும் மூலம் க்ரஹ் (பற்று) என்பதே. நில் - நிற்றல் = நிலைப்பு.
"குணபத் திரன்றாள் நிற்றலும் வணங்கி” (சூடா.7:76)
நிற்றல் - நிச்சல். ஒ. நோ: முறம் - முற்றில் - முச்சில்.
“நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய” (திவ். திருவாய். 1:6:11)
நிச்சல் - நித்தல். "நித்தல் விழாவணி" (சிலப். உரைபெறு கட்டுரை). நில் - நிற்றம். ஒ.நோ: வெல் - வெற்றம்.
நிற்றம் - நிச்சம் - நித்தம் - நித்ய(வ.)
இன்னும் இவற்றின் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் கண்டுகொள்க.