உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

முள்கா - (உள்கா) - உள்கார் - உட்கார்.

இன்றும் கல்லா மக்கள் உளுக்கார்தல் என்றே கூறுவர்.

iii. நேராதல்

123

குத்துக்கல்லும் பிற குத்தும் பொருள்களும் பொதுவாக நேராகக் குத்துவதால், குத்தற்கருத்தில் நேர்புக் கருத்துத் தோன்றிற்று. இங்கு நேர்பு என்றது வளையாமையை; சாயாமையை அன்று.

செங்குத்து நட்டுக்குத்து முதலிய வழக்குகளை நோக்குக.

குத்துதல் = நேராதல். குத்து குத்தி - (கத்தி) - கதி.

கதித்தல் = நேராதல். நேர்கிழக்காகச் செல்லுதலைக் கிழக்கே கதிக்கச்

செல்லுதல் என்பர் நெல்லை நாட்டார்.

கதி - கதிர் = வளையாமற் செல்லும் ஒளியிழை.

கதிர் - கதிரவன்.

iv. குத்தும் பொருள்கள்

உல் = தேங்காயுரிக்குங் கருவி. உள் - அள் = நீர்முள்ளி.

உள் - உளி. உளி உசி - ஊசி.

உளித்தலைக்கோல் = நுனியிற் கூரான கோல். உளியம் = உளிபோன்ற கூரிய நகமுள்ள கரடி. உறு உறும்பு = குத்தும் சிறு கரம்பைக்கட்டி. உகிர் = நகம்.

உள் - அள் - (அ-) - அயில் = வேல்.

குத்து குத்தி = பற்குத்தி போன்ற கருவி. குள் - கள் - கள்ளி = ஒருவகை முட்செடி. கள் - கண்டு கண்டு = கண்டங்கத்தரி.

கண்டு - கண்டம்

கண்டு

=

முள்ளி.

=

கண்டங்கத்தரி, கள்ளி, எழுத்தாணி.

கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை. கண்டல் - கண்டலம்

கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள்.

கண்டகம்

கண்டகி = இலந்தை, தாழை, மூங்கில், முதுகெலும்பு.