சுட்டொலிக் காண்டம்
145
நாட்டுப்புறத்து மக்கள் இன்றும் தாமரையைத் தாம்பரை என்றே என்பது
வழங்குவர். தாமரை
என்பது
செம்மலரையும் முளரி
வெண்மலரையும் தொடக்கத்திற் குறித்ததாகத் தெரிகின்றது.
துள் - (தள்) - தளவு - தளவம் = செம்முல்லை.
தும் - (துவ்) - துவர் = சிவப்பு, காவி, பவழம், பாக்கு, காசுக்கட்டி.
துவர்ப்பு = சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை.
துவர் - துவரி = காவி, இலவம்பூ.
துவரித்தல் = செந்நிறமூட்டுதல்.
துவர் - துவரை = செம்பயறு.
துவரை - தோரை = செங்கா-ப்பனை, அரத்தம்.
துவர் - தோர். நெ - + தோர் = நெ -த்தோர் = அரத்தம்.
துவர் - துகிர் = பவழம்.
துவள் - துவண்டை = காவியுடை.
அரன், சிவன், சேந்தன், சேயோன், சொக்கன் என்பன ஒரு பொருட் சொற்கள். கரியோன், கண்ணன், மாயோன், மால் முதலியவை திருமாலையும்; கரியோள் (கருப்பா-), காளி, மாயோள், மாரி முதலியவை காளியையும்;
கருமைபற்றிக்
குறிக்கும்
ஒருபொருட் சொற்களாயிருத்தலை நோக்குக. சொக்கன் என்பது அழகன் என்று பொருள்படுமேனும், சிவனைக் குறிக்கும்போது அப் பொருள் படாது.
viii. தெரிதல்
விளங்கும் (ஒளிரும்) பொருள்கள் தெளிவாகத் தெரிதலால், விளக்கத்தைக் குறிக்கும் சொற்கள் தெளிவாகத் தெரிதலைக் குறிக்கும்.
துலங்குதல் = விளங்குதல், தெளிவாகத் தெரிதல்.
—
துல் தெல் தென். தென்படுதல் = தெரிதல், தோன்றுதல், புலப் படுதல்.
துளங்குதல் = விளங்குதல்.
"துளங்கு மிளம்பிறை யாளன்'
(65. 88:10)
துளங்கொளி = மிக்கவொளி. துள் - துண் - துணி = ஒளி (பிங்.).
துள் - தெள். தெள்ளுதல் = விளங்குதல், தெளிவாதல்.