சுட்டொலிக் காண்டம்
51
இரு திணையிலும், பெண்பால் ஆண்பாலினும் மடம் மிக்க தாகக் கருதப்படுவதால் மடவரல் மடந்தை (பேதை, ஏழை) முதலிய பெயர்கள் உயர்திணையிலும், மந்தி மூடு முதலிய பெயர்கள் அஃறிணையிலும், பெண்பாலைக் குறிக்க வெழுந்தன.
இளமையிலேயே அழகும் சிறந்திருப்பதால், முருகு, மதவு, மடம் முதலிய சொற்கள் அழகையும் உணர்த்தின.
(4) புதுமை
எதுவுந் தோன்றியவுடன் புதுமையா யிருக்குமாதலால், தோன்றற் கருத்தில் புதுமைக் கருத்துத் தோன்றிற்று. ஒரு மாணவன் ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்த துவக்கத்தில் புதுமாணவன் எனப்படுதலையும், ஒரு கருவி முதன்முதற் கண்டுபிடிக்கப்பட்டவுடன், புதுக்கருவி
யெனப்படுதலையும், நோக்குக.
-
=
(குது) கொத்தம் புதுமை. இச் சொல் இவ் வடிவில் இன்று தெலுங்கில் மட்டும் வழங்கி வருகின்றது.
கொத்த = புதிய. கொத்தகா = புதிதா-.
இன்று தமிழில் வழங்கும் வடிவுகளாவன:
குது - (குடு) கடு கடி = புதுமை.
""
"கடிமலர்ப் பிண்டி "
(குடு) - (கொடு) -கோடுகோடகம் = புதுமை.
கோடுகோடி = புதுமை, புத்தாடை.
(சீவக. 2739)
நுது என்னும் தமிழ் அடியினின்றே நூதனம் என்னும் வடசொல் திரிந்துளது.
-
புது புதுமை. புது புதுக்கு புதுக்கம். புதுவல் புதிதா-த் திருந்திய நிலம். புதிர் = புதுநெல்.
புதுமுதல் = புதியவர்போற் பேசுதல், புதினம் = புதுமை, புதுச்செ-தி.
—
=
முள் - (மள்) மழ மழலை இளமை, புதுமை. மழலைத்தேன் புதுத்தேன்.
மழ - (வழ) வழை = புதுமை.
-
"வழைமது நுகர்பு”
=
(umflum: 11, 66)