உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

செங்கோன் அரசனைக் குறித்தது.

ஒப்பியன் மொழிநூல்

கடுங்கோன்

என்னும்

பெயர்களில்

அரசன் என்னும் பொருளில், கோன் என்னும் பெயரே ஈறு கெட்டுக் கோ என்றாகும். தலைக்கழகக் காலத் தரசர் பெயர் செங்கோன் கடுங்கோன் என்று வழங்கினதையும், கடைக்கழகக் காலத்தரசர் பெயர் (பாலைபாடிய பெருங்) கடுங்கோ, இளங்கோ (அடிகள்) என்று வழங்கினதையும், கோ என்னும் பெயர் பசுப்பொருளுக் கேற்பதையும் கோன் என்னும் பெயர் அரசனுக்கும் இடையனுக்குமன்றிப் பசுவுக் கேலாமையையும் நோக்குக.

கோ என்பதை, ஆ மா என்பவற்றோடு சேர்த்து,

66

'ஆமா கோனவ் வணையவும் பெறுமே"

என்று பவணந்தியார் கூறியது தவறாகும்.

கோ

என்னும் பெயர் பெற்றத்திற்கு

போனமையின்,

கோன் என்பதின்

(1560T. 248)

வழக்கற்றுப்

ஈறுகெட்ட வடிவம்,

அரசனைக் குறிக்கும்போது மயக்கத்திற் கிடமில்லை.

தா என்னும் சொல் ஆரிய மொழிகளில் வழங்கினும், தமிழுக்கு எங்ஙனம் உரியதோ, அங்ஙனமே கோ என்னுஞ் சொல்லும் உரிய தென்க. இன்னும் இதன் மயக்குத் தெளிய, இப் புத்தகத்தின் இறுதியிற் காண்க.

அரசியல்பற்றிச் சில தமிழ்ச்சொற்கள் ஆரிய மொழிகளில் வழங்குகின்றன. அவை அரசு, பாழி முதலியன. அரசு என்னுஞ் சொல்லின் வரலாறு பின்னர்க் கூறப்படும்.

பாழி = நகர். Gk. polis, a city. இச் சொல்லிலிருந்தே, police (the system of regulations of a city), policy (manner of governing a city or nation), political (pertaining to policy), politics (science of government), polity (civil constitution) முதலிய சொற்கள் பிறக்கும்.

தொழிற்பெருக்கமும் குலப் பிரிவும்

மருதநிலத்தில் முதலாவது உழவர் என்னும் ஒரே வகுப்பார் இருந்தனர். பின்பு, முறையே வணிகம் அரசியல் துறவு என்பன பற்றி, அவ் வகுப்பினின்றும் பிரிந்து போனவர், வாணிகர் அரசர் அந்தணர்