உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

59

காளி துடுக்கு நிலையளாதலின், அமைந்த நிலைக்குரிய தேவிவடிவம் சிவன் என்பதின் பெண்பாலான சிவை என்னும் பெயராற் குறிக்கப்பட்டது. சிவையைப் பார்வதி யென்பர் வடநூலார்.

சிவை பர்வதவரசன் மகளாகிப் பார்வதியென்று பெயர் பெற்றதாக ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால், குறிஞ்சித் தேவி என்று பொருள்படும் மலைமகள் என்னும் பெயரையே, மலைக்கு மகள் எனப் பிறழவுணர்ந்து அக் கதை கட்டப்பட்டதோ என ஐயுறக் கிடக்கின்றது. கலைமகள், மலர்மகள், நிலமகள் முதலிய பெயர்களில் மகள் என்பது முறைகுறிக்காது பெண்பாலையே குறித்தல் காண்க. பர்வதவரசன் என்னும் தொடரும் மலைகட்கு அரசுபோற் சிறந்த பனிமலையையே குறித்தலையும், சிவன் பண்டு குறிஞ்சித் தெய்வமா யிருந்ததையும், மகேந்திரம் முழுகிய பின் பனிமலை சிவனுக்குச் சிறந்த இடமாகக் கொள்ளப்பட்ட மையையும் நோக்குக. ஆகவே, மலையரசன் பெற்ற மகள் என்பது பனிமலை அடைந்த அல்லது தங்கிய பெண்டெய்வம் என்றே பொருள்படுவது காண்க.

சிவனியமும் (சைவமும்) மாலியமும் (வைணவமும்) வெவ்வேறு சமயங்களா யிருக்க அவற்றை ஆரியர் முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கைபற்றி ஒன்றாயிணைத்ததால், சில புதுக் கருத்துகளைக் கொள்ள வேண்டியதாயிற்று. அவையாவன :

அரன் = தேவன். இப் பெயரின் வரலாறு பின்னர்க் கூறப்படும்.

(1) சிவபெருமானுக்கு அழிப்பும் திருமாலுக்குக் காப்பும் தொழிலாக வகுத்தல்.

தீப்போல்பவன் சிவன் என்றும் மேகம் போல்பவன் திருமால் என்றுங் கொண்டமையால், முறையே அவற்றின் தொழிலான அழிப்பும் காப்பும் அவ் விருவர்க்கும் கூறப்பட்டன. தீ ஆண்டன்மையும் நீர் பெண்டன்மையுங் குறித்தற்கேற்றல் காண்க.

(2) அரியரன் (ஹரிஹரன் அல்லது சங்கர நாராயணன்) என்ற

வடிவம் அமைத்தல்.