உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

ஒப்பியன் மொழிநூல் கடலென்றுங் கூறப்பட்டிருத்தல் வேண்டும். நெட்டிடையிட்டு நிகழ்ந்த பல எரிமலைக் கொதிப்பும் வெள்ளமும்பற்றியே, ஊழியிறுதியில் நெருப்பால் அழிவு நேருமென்று மலைவாண ராகிய சிவனை வணங்கு வோரும், நீரால் அழிவு நேருமென்று கடல்வாணராகப் பிற்காலத்திற் கூறப்பட்ட திருமாலை வணங்குவோரும், முறையே கொண்டிருத்தல் வேண்டும்.

5. பண்டைத்தமிழ் நூல்களிட்டுப் பொருள்கள் கூறப்படாமை

பழந்தமிழ் நூல்களில், தமிழர் வடக்கிருந்து வந்தார் என்பதற்குச் சான்றாகத்தக்க, ஒருவகை அயல்நாட்டுப் பொருளும் கூறப்படவில்லை.

'வெம்மை' யென்னுஞ் சொல்லுக்கு விருப்பப் பொருளிருப் பது ஒரு சிறிது சான்றாகத் தோன்றலாம். குளிர்நாடுகளில் வெப்பத்தையும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சியையும் விரும்புவது இயல்பு. அதனாலேயே, 'a warm welcome,' 'to pour cold water', 'பாட்டுக் குளிர்ச்சியா யிருந்தது' 'சூடான சொல்' முதலிய வழக்குகள் முறையே நற்பொருளும் தீப்பொருளும்பற்றித் தோன்றியுள்ளன. ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், தமிழ்நாட்டில் வெம்மையும் சில காலங்களில் வேண்டப்படுவது தெரியவரும். பனிக்காலங்களில் வெம்மையை வேண்டுவதையும், பொதுவாய் மழையையும் குளிரையும் தாங்க முடியாமையையும், 'கொன்வரல் வாடை', 'பலநாளைப் பாவத்தை (வெயிலை)த் தாங்குகிறோம். ஒரு நாளைப் புண்ணியத்தை (மழையை)த் தாங்க முடியவில்லையே' என்னும் வழக்குகளையும், இங்கிலாந்திலும் ‘a warm reception' என்பது தீப்பொருளில் வழங்குவதையும் நோக்குக.

"வெம்மை வேண்டல்

என்பது தொல்காப்பியம்.

""

(உரி.38)