பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

“மொழிஞாயிறு” தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள்

தி.பி. 1933 (1902)  : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார்.

தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி

தொடக்கக் கல்வி :நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி.

உயர்நிலைக் கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு)

தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார்.

தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார்.

தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார். (இவ் வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும் வெற்றி பெறவில்லை). “கிறித்தவக் கீர்த்தனம்”- நூல் வெளியீடு. உதவித் தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக்கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். “சிறுவர் பாடல் திரட்டு” நூல் வெளியீடு.