பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தி.பி.1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு.

தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார்.

தி.பி. 1964 (1934)  : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார்.

தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு “செந்தமிழ்க்காஞ்சி” நூல் வெளியீடு, இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். "கட்டுரைக் கசடறை" என்னும் வியாச விளக்கம் நூல் வெளியீடு.

தி.பி. 1971 (1940) : “ஒப்பியன் மொழிநூல்” முதற்பாகம் "இயற்றமிழ் இலக்கணம்” ஆகிய நூல்கள் வெளியீடு. “கட்டுரை வரைவியல்” என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு.

தி.பி. 1972 (1941) : “தமிழர் சரித்திரச் சுருக்கம்” வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. "தமிழன் எப்படிக் கெட்டான்” ஆகிய நூல்கள் வெளியிடல்.

தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார்.

தி.பி.1974(1943) : “சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடைபெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

தி.பி. 1975 (1944) : சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார்.