- தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார்.
- “திரவிடத்தாய்" - நூல் வெளியீடு.
தி.பி.1980 (1949) : "சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்" - நூல் வெளியீடு.
பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
தி.பி. 1981 (1950) : “உயர்தரக் கட்டுரை இலக்கணம்” (மு.பா.) . நூல் வெளியீடு.
தி.பி.1982 (1951) : “உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) நூல் வெளியீடு.
தி.யி.1983(1952) : “பழந்தமிழாட்சி”- நூல் வெளியீடு.
தி.பி.1984 (1953) : “முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் ”– நூல் வெளியீடு.
தி.பி.1985 (1954) : "தமிழ்நாட்டு விளையாட்டுகள்" - நூல் வெளியீடு.
தி.பி.1986(1955) : : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் “தமிழ்ப் பேரவை” இவரின் தொண்டைப் பாராட்டித் ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
'A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது.
தி.பி. 1987 (1956) : “தமிழர் திருமணம் ”- நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார்.
தி.பி.1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.