பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட 'தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது.

தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது.

தி.பி. 1992 (1961) : "சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு” - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.

தி.பி.1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு.

தி.பி.1995(1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - “தமிழ்ப் பெருங்காவலர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. "என் அண்ணாமலைநகர் வாழ்க்கை" என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது.

தி.பி. 1997 (1966) : “இசைத்தமிழ்க் கலம்பகம்" "பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்" "The Primary Classical Language of the World" என்னும் நூல்கள் வெளியீடு.

தி.பி.1998 (1967) : “தமிழ் வரலாறு" “வடமொழி வரலாறு" "The Language Problem of Tamilnadu and Its Logical Solution" ஆகிய நூல்கள் வெளியீடு.