பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

25



"தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக் காணிற் கடைப்பட்டா னென்றிகழார் – காணாய் அவன்றுணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற மகன்றுணையா நல்ல கொளல்.” (நாலடி.136)

"எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடிக் கற்றோரை மேல்வரு கென்பர்" (வெற்றி.38)

என்பன இக் குறட் கருத்தைத் தழுவியன. “உடலோ டொழியுஞ் சாதி யுயர்ச்சி” என்று ஒருவன் வாழ்நாள் முழுதும் குலம் மாறாதிருப்பதாகப் பரிமேலழகர் கூறியிருப்பது ஆரிய நச்சுக் கருத்தாகும்.

410. விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.

(இ-ரை.) இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூல்களைக் கற்றவரொடு கூடியுள்ள மற்றக் கல்லாதவர்; மக்களொடு விலங்கு அனையர் - பகுத்தறிவுள்ள உயர்திணை மக்களொடு கூடியுள்ள அஃறிணை விலங்குகள் போல்வர்.

இக் குறட் பொருள்கோள் எதிர்நிரனிறை.

"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே.’ (தொல்.484)

"மாவும் மாக்களும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (தொல்.1531)

"மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (தொல்.1532)

என்பன, கல்வியாலாகும் பண்புடைமை யுண்மையின்மைபற்றி மாந்தரை மக்களென்றும் மாக்களென்றும் இருவேறு வகுப்பாகப் பிரிக்கும். "மக்களே போல்வர் கயவர்” என்பதால், வடிவொப்புமையால் இரு வகுப்பாரும் ஒத்த பிறப்பினரல்லர் என்பதாம். விலங்கு. நூல் என்பன பால்பகா வஃறிணைப் பெயர்கள். இலங்கு நூலாவன அறிவுவிளக்கத்திற் கேதுவான தொல்காப்பியமும் திருக்குறளும் போல்வன. (254ஆம் நாலடிச் செய்யுளை நோக்குக, 403ஆம் குறளுரை).