பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

55



“ஒதலே வேட்ட லீத லுலகோம்பல் படைப யிற்றல் மேதகு போர்செய் தீட்டல் வேந்தர்செய் தொழில்க ளாறே." (சூடா. 12: 52)

இவற்றுள் வேட்டல் என்பது வேட்டையாடல். பிற்காலத்தில் ஆரியர் இதற்கு வேள்வி செய்தல் என்று பொருள் கூறிவிட்டனர். அரசர் தொழில் ஆறாயிருக்கவும்,

“ஐவகை மரபின் அரசர் பக்கமும்” (புறத்.20)

என்று தொல்காப்பியங் கூறுவது ஆராயத்தக்கது. அறுதொழில்களுள் எதைத் தொல்காப்பியர் நீக்கினார் என்பது திட்டமாய்த் தெரியவில்லை. ஆயின், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் அரசர்க்குச் சிறப்பாகவுரிய போர்த் தொழிலை நீக்கி உரைவரைந்துள்ளனர். "நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக" என்று ஒளவையார் கூறியதுபோல், எல்லா வினைகளையும் எண்ணியே செய்யவேண்டுமாயினும், மிகுதியாக எண்ணுவதைவேண்டுவது போர் வினையே. அதனால் வாழ்வுஞ் சாவும் நேர்தலின், இயன்றவரை அதனை விலக்கி இன்றியமையாத விடத்தே அதை மேற்கொள்ளுமாறு நால்வகை ஆம்புடைகள் வகுக்கப்பட்டுள்ளன. வலிய பகைவன் தாக்கவரின் கொடை அல்லது திறையாலும்; ஒத்த பகைவன் வரின் இன்சொல், பிரிப்பு, கொடை என்னும் மூன்றனுள் ஒன்றாலும் போரை விலக்கி, எளிய பகைவனாயின் போரால் ஒறுத்தல் வேண்டுமென்பது பொதுவான கருத்து. துணைவலி சேர்வதால் எளியவன் வலியவனாவதும், அது தீர்வதால் வலியவன் எளியனாவதும் இயல்பு. பகைவர் பலராயின் பிரிப்பு ஒன்றே கையாளத்தக்க சிறந்தவழியாம். வலிய பகைவனையும் ஒத்த பகைவனையும் மகட் கொடையாலும் நட்பாக்கலாம். இவை யெல்லாவற்றையும் போர் தொடங்கு முன்னரே எண்ணவேண்டு மென்பதும். தொடங்கியபின் எண்ணுவது குதிரை களவுபோனபின் கொட்டகையைப் பூட்டுவதும் வாசல் நிலையில் முட்டி விட்டு வணங்கிக் குனிவதும் போன்ற குற்றமாகு மென்றும், இங்குக் கூறப்பட்டன. 'கருமம்' தென்சொல்லே, இதன் விளக்கத்தைப் பின்னிணைப்பிற் காண்க.

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.

(இ-ரை.) ஆற்றின் வருந்தா வருத்தம் - தக்க வழியாற் கருமத்தை முயலாத முயற்சி; பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - பின்பு பலர் துணைநின்று கருமங்கெடாமற் காப்பினும் கெட்டுப் போகும்.