உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'வா' என்னும் வினைச்சொல் வரலாறு

வள்-வர்-வார்-வ. வர்-வரு.

சொல்லாக்கத்தில் ட த ல ழள ஐந்தும் ரகரமாகத் திரியும். அத் திரிவில் லகரளகரம் பேரளவும், அவ் விரண்டனுள்ளும் ளகரம் பெரும்பான்மையும், ஆகும்.

எ-டு:

ட ர : கடு-கடி-கரி, படவர்-பரவர்.

-

த - ர : விதை-விரை.

ல - ர : உலவு-உரவு, குலவை-குரவை, குதில்-குதிர், பந்தல்-பந்தர்.

ழ - ர : புழை புரை.

ள - ர : அள்-அர்-அரு-அருகு, கள்-கர்-கரு,சுள் - சுர்,

தெளி- முருகு

தெரி, நீள்-நீர், பிள்-பிர்-பிரி, முள்-முர்-முரு-

(இளமை), விள்-விர்-விரி.

முதற்காலத்தில் முதனிலையாக வழங்கி வந்த சில வினைச் சொற்கள் வழக்கற்றுப் போனதினால், இன்று அவற்றிற்குத் தலைமாறாக அவற்றின் தொழிற் பெயர்களே தமித்தும் துணைவினையொடு கூடியும் வழங்கி வருகின்றன.

எ-டு: முதனிலை

முற்காலப் புடைபெயர்ச்சி இக்காலப் புடைபெயர்ச்சி

நகு

நக்கான்

நகைத்தான்

தள்

தட்டான், தட்கின்றான்,

தளைத்தான்,

தட்பான்

தளைக்கின்றான்,

தளைப்பான்

கள்

கட்டான், கட்கின்றான்,

கட்பான்

களவுசெய்தான், களவு செய்கின்றான், களவு

செய்வான்.

களவாண்டான், களவாள்கின்றான்,

களவாள்வான்; களவாடி

னான், களவாடுகின்றான், களவாடுவான்; என்பனவும் தொழிற்பெயர் துணைவினை கூடி முதனிலையாகிப் புடைபெயர்ந்தனவே. ஆள், ஆடு என்பன துணைவினைகள். களவுபண், களவடி, களவுகாண் என்பனவும் துணைவினை கொண்டனவே.