'வா' என்னும் வினைச்சொல் வரலாறு
வள்-வர்-வார்-வ. வர்-வரு.
சொல்லாக்கத்தில் ட த ல ழள ஐந்தும் ரகரமாகத் திரியும். அத் திரிவில் லகரளகரம் பேரளவும், அவ் விரண்டனுள்ளும் ளகரம் பெரும்பான்மையும், ஆகும்.
எ-டு:
ட ர : கடு-கடி-கரி, படவர்-பரவர்.
-
த - ர : விதை-விரை.
ல - ர : உலவு-உரவு, குலவை-குரவை, குதில்-குதிர், பந்தல்-பந்தர்.
ழ - ர : புழை புரை.
ள - ர : அள்-அர்-அரு-அருகு, கள்-கர்-கரு,சுள் - சுர்,
ள
தெளி- முருகு
தெரி, நீள்-நீர், பிள்-பிர்-பிரி, முள்-முர்-முரு-
(இளமை), விள்-விர்-விரி.
முதற்காலத்தில் முதனிலையாக வழங்கி வந்த சில வினைச் சொற்கள் வழக்கற்றுப் போனதினால், இன்று அவற்றிற்குத் தலைமாறாக அவற்றின் தொழிற் பெயர்களே தமித்தும் துணைவினையொடு கூடியும் வழங்கி வருகின்றன.
எ-டு: முதனிலை
முற்காலப் புடைபெயர்ச்சி இக்காலப் புடைபெயர்ச்சி
நகு
நக்கான்
நகைத்தான்
தள்
தட்டான், தட்கின்றான்,
தளைத்தான்,
தட்பான்
தளைக்கின்றான்,
தளைப்பான்
கள்
கட்டான், கட்கின்றான்,
கட்பான்
களவுசெய்தான், களவு செய்கின்றான், களவு
செய்வான்.
களவாண்டான், களவாள்கின்றான்,
களவாள்வான்; களவாடி
னான், களவாடுகின்றான், களவாடுவான்; என்பனவும் தொழிற்பெயர் துணைவினை கூடி முதனிலையாகிப் புடைபெயர்ந்தனவே. ஆள், ஆடு என்பன துணைவினைகள். களவுபண், களவடி, களவுகாண் என்பனவும் துணைவினை கொண்டனவே.