114
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
உச்சத்தரம் பின்வருமாறு பல வகையில் உணர்த்தப் பெறும்: (1) 4ஆம் வேற்றுமைப் பெயரையடுத்த சிறப்புச் சொல்லால்,
எ-டு : கீழ்நாட்டுப் பூவிற்குச் சிறந்தது தாமரை.
கோவைக்குச் சிறந்தது திருக்கோவை.
(2) 7ஆம் வேற்றுமைப் பெயரையடுத்த சிறப்புச் சொல்லால்,
எ-டு : புறஉறுப்பிற் சிறந்தது கண்.
அறநூலிற் சிறந்தது திருக்குறள். பறவையினத்திற் பெரியது தீக்கோழி.
(3) மிகமிக என்னும் அடுக்குச்சொல்லால், இதற்கு எடுத்துக்காட்டு கூட்டுவாக்கியமாக வரும்.
எ-டு : எருமை பெரியது; யானை மிகப் பெரியது; திமிங்கிலம் மிகமிகப் பெரியது.
வெள்ளி ஒளியுள்ளது; திங்கள் மிக ஒளியுள்ளது; கதிரவன் மிகமிக ஒளியுள்ளது.
(4) நனிமிக கழிபெரு முதலிய மீமிசைச் சொற்களால், இதற்கும் எடுத்துக்காட்டுக் கூட்டுவாக்கியமாகத்தான் வரும். எ-டு : துரும்பு நொய்யது; பஞ்சு மிக நொய்யது; வறியவன் ந னி மி க நொய்யன். (நொய்ம்மை = கனமின்மை)
ஒருவனுக்கு உடல்நலமிருப்பின் மகிழ்ச்சிக் கிடமாம்; அத னொடு செல்வமிருப்பின் பெருமகிழ்ச்சிக் கிடமாம்; அவற்றொடு கல்வியுமிருப்பின் கழிபெரு மகிழ்ச்சிக் கிடமாம்.
(5) தலைசிறந்த என்னும் பெயரெச்சத்தாலும் தலைசிறந்தவன் தலைசிறந்தவள் முதலிய முற்றுச்சொற்களாலும்,
எ-டு : அகத்தியம் முத்தமிழும்பற்றியதாதலால் தலைசிறந்த இலக்கணமாகும்.
இற்றையுலகில், செருமானியர் மதிவளர்ச்சியில் தலை
சிறந்தவராகக் கருதப்படுகின்றனர்.
(6) எல்லாவற்றிலும் பெரியது என்பது போன்ற தொடரால்,
எ-டு : எல்லாப் புலவருள்ளும் சிறந்தவர் திருவள்ளுவர்.
நகரங்க ளெல்லாவற்றிலும் பெரியது இலண்டன் (மாநகரம்)