உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

" ஈயென இரத்தல் இழிந்தன் றதன் எதிர் ஈயேன் என்றல் அறனினும்இழிந்தன்று

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன் றதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்த்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே ஆயும் மாவும் சென்றுணக் கலங்கிச் சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும் புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை உன்னிச் சென்றோர்ப் பழியிலர் அதனால் புலவேன் வாழியர் ஓரி விசும்பின் கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோர் நின்னே.”

165

இது (புறம்.204), "இரத்தல் இழிவானது; ஈயாமை அதனினும் இழிவானது; கொடுத்தல் உயர்ந்தது; கொடுத்ததை வாங்காமை அதனினும் உ உயர்ந்தது. தண்ணீர் குடிக்க விரும்பியவர் பெரிய கடலுக்குச் செல்லார்; சிறிய ஊற்றிற்கே செல்வர். நீ ஒரு குறுநில மன்னனாயிருந்தாலும் கொடை யாளி என்று வந்தேன். நீ கொடா விட்டாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன்.அது நான் புறப்பட்டு வந்த வேளையின் குற்றமேயன்றி உன் குற்றமன்று." என்று கழைதின் யானையார் வல்வில் ஓரியிடம் கூறியது.

66

முற்றிய திருவின் மூவராயினும்

பெட்பின் றீதல் யாம்வேண் டலமே"

இது (புறம்.205; 1-2),"நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தர்தரினும் எம்மிடம் ஆர்வமின்றித் தருவதை யாம் விரும்ப வில்லை" என்று பெருந் தலைச்சாத்தனார் கடிய நெடுவேட்டுவனிடம் கூறியது.

66

குன்றும் மலையும் பலபின் னொழிய

வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென

நின்ற என்நயந் தருளிஈது கொண்

டீங்கனஞ் செல்க தானென என்னை

யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன் காணா தீத்த இப்பொருட் கியானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித் தினையனைத் தாயினும் இனிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே."