முன்னுரை
தமிழின் தொன்மையையும் முன்மையையும் அறியாத வரலாற்றா சிரியர், ஆரிய வேதக்காலத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடங்கும் தவறான வழக்கம் இன்னும் இருந்து வருகின்றது. தமிழ் வேத ஆரியத்திற்கு முந்தியதாயிருப்ப தோடு வேதப் பெயர்களே தமிழ்ச் சொற்களின் திரிபாகவுமிருக்கின்றன.
வேதம் : விழித்தல் = பார்த்தல், காணுதல், அறிதல்.
விழி = அறிவு, ஓதி (ஞானம்).
"தேறார் விழியிலா மாந்தர்"
விழி - L.Vide - Vise; Skt.Vid - Veda.
(திருமந்திரம், 177)
9
ஒ.நோ:குழல் -குடல்; ஒடி ஒசி.
சுருதி:
செவியுறுதல் = கேட்டல்
செவியுறு - ச்ரு - ச்ருதி = கேள்வி.
முதற்காலத்தில் எழுதப்பெறாது கேட்டேயறியப்பட்டு வந்த ஆரிய மறை.
மண்டலம்: முல் - முன் - முனி = வில்.
முல் - முர் - முரி. முரிதல் = வளைதல்.
முரி - மூரி = வளைவு.
முர் - முரு - முறுகு. முறுகுதல் = வளைந்த காதணி. முர் - முரு - முறுகு. முறுகுதல் = வளைதல்; திருகுதல்.
முறுகு - முறுக்கு = திருகல், திருகிய தின்பண்டம். முறுக்கு - முறுக்கம்.
-
முறுமுற்று முற்றுகை = நகரைச் சூழ்கை.
முறுமுறை மிறை = வளைவு.
—
முறு - முறி. முறிதல் = வளைதல்,
முறி - மறி. மறிதல் = வளைதல், மடங்குதல்.
முல் - (முள்) - முண்டு = உருட்சி,திரட்சி.
=
முண்டு - முண்டை = உருண்டை, முட்டை.