உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

21

தென்னை, பனை முதலியவற்றிற் போல், நுனியையும் அடியையும் ஒருங்கே ஒட்டியே தனித்தனி மட்டையோடு தோன்றி, விசிறி வடிவில் அல்லது தூவுவடிவில் முரடாயிருப்பது ஓலை.

ஐவகை மலர் நிலை:

தோன்றும் நிலை அரும்பு; மலரத் தொடங்கும் நிலை போது; மலர்ந்த நிலை மலர்; கீழே விழுந்த நிலை வீ; வாடிச் சிவந்த நிலை செம்மல்.

அரும்பு, மொட்டு, முகை, மொக்குள் என்பன, பருமன் பற்றிய வெவ்வேறு அரும்பு வகைகளைக் குறிப்பன.

மூவகைக் காய்ப்புநிலை :

இளங்காய் பிஞ்சு ; முதிர்ந்தது காய்; பழுத்தது பழம் அல்லது கனி.

ஆங்கிலம் மிகுந்த வளர்ச்சியுற்று, ஏறத்தாழ மூன்றிலக்கம் சொற்களைக் கொண்டுள்ளது. ஆயினும் இன்னும் அதில் காயைக் குறிக்கச் சொல் அமையவில்லை; பழுக்காத பழம் என்று வட்ட வழியே குறிக்கின்றனர்.

சில வகைப் பிஞ்சுகட்குச் சிறப்புப் பெயருமுள. தென்னை, பனை முதலியவற்றின் பிஞ்சு குரும்பை; மாம் பிஞ்சு வடு; பலாப்பிஞ்சு மூசு; வாழைப் பிஞ்சு கச்சல்;

இங்ஙனமே நிலைத்திணையின் (தாவரத்தின்) எல்லாவுறுப்பு களையும், நுண்பாகுபாடு செய்து, வெவ்வேறு பெயரிட்டிருக்கின்றனர். பண்டைத் தமிழ்ப் பொதுமக்கள்.

இடங்கர் (alligator), கராம் (gavial), முதலை (crocodile) என மூவகையாக முதலைகள் வகுக்கப் பட்டிருக்கின்றன.

குதிரை முதற் கடல்கோளுக்கு முன்பே அரபி நாட்டினின்று குமரி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. அது அயல்நாட்டு விலங்கேனும், அதைப் பல்வேறு வகைப்படுத்தி வெவ்வேறு பெயரிட்டிருக்கின்றனர்.

புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம் என்னும் எண்வகைக் குதிரைகளும் அவற்றின் சிறப்பிலக்கணமும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திற் கூறப்பட்டுள (நரிபரி.87-94).

பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை கோரம்; சேரன் குதிரை பாடலம்; குறுநில மன்னர் குதிரை கந்துகம்.