உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

வரணம்

-

31

வரணி. வரணித்தல் = வண்ணத்தால் வரைதல்போற்

சொல்லாற் புகழ்தல். அல்லது விரித்துக் கூறுதல்.

வரணி

-

வரணனை. வருணம், வருணி, வருணனை, என்பன வடசொல்லைப் பின்பற்றிய வழு வடிவங்கள். வரணம் என்பதே பாண்டி நாட்டுலக வழக்கு.

வரணி வர்ண (வ.). வரணனை- வர்ணனா (வ.)

வண்ணம் - வண்ணி = வரணி. வண்ணி -வண்ணனை = வரணனை. அடிப்படைச் சொல் தமிழில் மட்டும் அமைந்திருப்பதும், வடமொழியில் மேற்படைச் சொல்லே அமைந்திருப்பதும், அவற்றின் முன்மை பின்மையைக் காட்டுதல் காண்க.

இனி, “காக்கைக் காகா கூகை” என்னும் ஓரெழுத்துப் பாட்டும், "சென்னி முகமாறுளதால்” என்னும் காளமேகம் மும்மடி யிரட்டுறலும், இராமலிங்க அடிகளின் மாணவர் தொழுவூர்-வேலாயுத முதலியார் பாடிய பதின்பங்கி (தசபங்கி), பதிற்றுப் பதின்பங்கி (சதபங்கி) என்னும் சொல்லணி களும், அருணகிரியார் பாடிய திருப்புகழ் வண்ணங்களும்,பட்டினத்தார் பாடிய உடற்கூற்று வண்ணமும், அகப்பொருட் செய்யுட்களில் வரும் உள்ளுறை யுவமையும், போன்ற அருஞ்சுவையின்பக்

வேறெம்மொழியிலக்கியத்திலும் காணக் கிடையா.

66

முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான்போல் கூர்நுதி மடுத்ததன் நிறஞ்சாடி முரண்தீர்ந்த நீள்மருப் பெழில்யானை

மல்லரை மறஞ்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண்

கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும் நாடகேள். ' (கலி-52)

கூறுகள்

என்னும் 52-ஆம் கலித்தொகைச் செய்யுளின் தரவு, யானையின் செவி மறைவில் பின்னிருந்து வந்து பாய்ந்த புலியை அந்த யானை சினந்தது, காதலனின் களவொழுக்கத்தைப்பற்றிப் பழிதூற்றிய அயலாரைக் கடிந்த தாகவும்; யானை புலியைக் குத்தி மாறுபாடு தீர்ந்தது காதலன் காதலியை மணந்து கொண்டு அயலாரை வாயடக்குவதாகவும்; யானை தன் இனத்தின் நடுவே உலாவித் திரிதல், காதலன் தன் உறவினருடன் கூடியிருந்து இல்லறம் நடத்துவதாகவும், உள்ளுறைப் பொருள்படத் தோழி கூறிய கூற்றாக அமைந்திருத்தல் காண்க.