உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

44

றை = 1, வீட்டிறப்பு,

"குறியிறைக் குரம்பை”

2. பெண்டிரின் வளைந்த முன்கை.

"எல்வளை யிறையூ ரும்மே"

(புறம். 129)

(கலித்.7:16)

இறைதல் = வளைதல், வணங்குதல்.

"இணையடி யிறைமின்"

(பதினோ, ஆளு. திருக்கலம். 48)

இறை - இறைஞ்சு. இறைஞ்சுதல் = வணங்குதல்.

இற இறா = வளைந்த பெருங் கூனி. சின்னகூனி = (மீன்)......

-

இறா- இறால் = 1. வட்டமான தேன்கூடு.

2.பெருங்கூனி.

இற - இறவு = 1. பெருங்கூனி.

"கடலிறவின் சூடுதின்றும்”

2.தேன்கூடு(ஞானவா.)

இறா- இறாட்டு = 1.பெருங்கூனி. 2.தேன்கூடு.

3.நூற்கும் சக்கரம்.

இறாட்டு - இறாட்டை = நூற்கும் சக்கரம்.

இறாட்டு-இறாட்டினம் = 1.நூற்கும் சக்கரம்.

§.

ய்

(பட்டினப்.63)

2. நீரிறைக்கும் உருளை. 3.ஏறி விளையாடும் குடையிறாட்டினம் அல்லது இறாட்டின வூஞ்சல்.

நூற்கும் சக்கரம் கையினாற் சுற்றப்படுவதனால், அது கையிறாட்டு அல்லது கையிறாட்டை, அல்லது கையிறாட்டினம் என்று சொல்லப் படும். இறாட்டு என்னும் சொல்லே, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியில் இல்லை. இராட்டு என்னும் வழூஉச் சொல் மட்டும், தேன்கூடு என்னும் பொருளிற் குறிக்கப்பட்டுளது.

இறாட்டு, இறாட்டை, இறாட்டினம் என்னும் மூவடிவும், இந்தியில் ரஹட் அல்லது ரஹண்ட்டா என்னும் வடிவில் நூற்குங் கருவியைக் குறித்து வழங்குகின்றன. ஆயின், இந்திச்சொல்லே தமிழ்ச் சொற்கு மூலமாகச் சென்னை அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது.

நூல் என்னுஞ் சொல்லே நுண்ணியது என்னும் வேர்ப் பொருளு டையது. "நுணங்கு நுண்பனுவல்” என்பது மிக நுண்ணிய நூலைக் குறிக்கும்.