உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

பழந்தமிழாட்சி

(4) கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன். (5) குந்தன் நம்பூரலான இராஜராஜ நீலகங்கரையன்.

(6) அம்மையப்பன் மருதனான இராஜராஜ மூவேந்தரையன். (7) பாவந்தீர்த்தானான இராஜேந்திர சோழச் சம்புவராயன். (8) நரசிங்க வன்மனான கரிகால்சோழ ஆடையூர் நாடாழ்வான். (9) சோமன் திருவண்ணாமலை யுடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கன்.

(10) சோமன் வரந்தருவானான சோளேந்திர சிங்கப் பிருதிகங்கன்.

நாட்டதிகாரிகள் செயல்: நாட்டதிகாரிகள் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்து, அதிலுள்ள ஊர்ச்சபையார் கோயிற் கண்காணிப்பாளர் அறநிலையப் பாதுகாப்பாளர் முதலியோர் தத்தங் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனராவெனக் கவனிப்பதும் ஊர்க்கணக்கு கோயிற்கணக்கு அறநிலையக்கணக்கு முதலியவற்றைத் தணிக்கை யிடுவதும், குற்றங் கண்டவிடத்துத் தண்டிப்பதும், ஆங்காங்குள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பதும், அரசாணை களை நிறைவேற்றுவதும், ஊர்ச்சபைத் தேர்தலை நடத்திவைப்பதும் செய்வர்.

சிற்றூர்கள் நாட்டதிகாரிகளின் கண்காணிப்பிலும், பேரூரான நகர்கள் அரசனது நேரடியான கண்காணிப்பிலும் இருந்ததாகத் தெரிகின்றது.

ஊர்ச்சபையார், தம் குற்றத்தை மறைத்தற் பொருட்டும் தம்மேற் குற்றத்தை ஏற்றாமைப் பொருட்டும் தம்மைக் கண்காணிக்கும் நாட்டதிகாரிகட்கும் தம்மை வினவவரும் வேறதிகாரிகட்கும் கை யூட்டும் கொடுப்பதுண் டென்பது, சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஓர் ஊர்ச்சபையார். வாரப்பற்றிலிருந்தும், கடமைப்பற்றி லிருந்தும், வரும் வாரத்தையும் கடமையையும், சுந்தர பாண்டி யனுடைய அதிகாரிகளின் நட்பைப்பெறச் செலவிட்டதிலிருந்து அறியக் கிடக்கின்றது.

ஊர்ச்சபையார் செயல்: ஊர்ச்சபையாருள், ஒவ்வொரு வாரியத்தாரும் தத்தம் கடமையை ஆற்றிவந்தனர். அவருள் ஊர் வாரியத்தினர்க்கு, உரிமை (Civil) வழக்கு, குற்ற (Criminal) வழக்கு ஆகிய இருவகை வழக்கையுந் தீர்க்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், முழு அதிகார மிருந்தது. அவரால் தீர்க்கமுடியாத வழக்கும், அவர்

1. 'மூன்றாங் குலோத்துங்கச் சோழன் (இராமச்சந்திர தீட்சிதர்) பக்.87-8

2. Pandian Kingdom, p.218-9