உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆட்சி முறை

59

தீர்த்த வழக்கின் மேன்முறையீடும் (Appeal) அரசனிடம் கொண்டு போகப் பட்டன.

ஒரே வாரியத்திற்குரிய செய்தியை அவ்வவ் வாரியத்தாரும், பல வாரியங்கட்குரிய செய்தியை எல்லா வாரியத்தாரும் கூடிச் சூழ்ந்து முடிவுசெய்தனர். ஊர்ச்சபைக் கூட்டங்கள் காளமூதியும் பறைசாற்றி யும் கூட்டப்பட்டன.கூட்டங் கூடுவதற்கு ஊர்மண்டபம் அல்லது மாளிகை இருந்தது. அஃதில்லாத விடத்துக் கோயில் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

அவ்வப்போது வரும் அரசாணைகளைத் தலைமேற் கொண்டு

அவற்றை

நிறைவேற்றி

வைப்பதும்,

அவற்றுள் முக்கியமானவற்றையும் ஊராட்சியில் தாம் செய்துள்ள புதுமை யான ஏற்பாடுகளையும், கல்லில் வெட்டுவித்துச் சபை மண்டபத்தி லாவது கோயில் மண்டபத்திலாவது பதிப்பிப்பதும், ஊர்ச்சபையார் கடமையாகும்.

ஊர்க் குடியிருப்பையும், வெள்ளாண்மையையும் இரவிற் காவல் செய்வது பாடிகாவலன் வேலை.

ஊரவையாரின் ஊராட்சி,

ஊரமையென்றும் கூறப்படும்.

ஊராண்மை

யென்றும்

சிற்றூர்த் தலைவன் செயல்: ஆள்நிலப் பிரிவான ஒரு கூட்டூரின் பகுதியாய், ஒரே குலத்தார் அல்லது ஒரு குலத்தார் பெரும்பான்மையாராக இருக்கும் சிற்றூரில் அவ்வக் குலத்திற்கும் இடத்திற்குமேற்ப, அம்பலகாரன், ஊராளி, கவுண்டன், கிழவன், குடும்பன், சேர்வை (சேர்வைகாரன்) தலைமகன், தலைவன், நாடன், (நாடான், நாடாள்வி), நாட்டான், நாட்டம்பலம், பட்டங்கட்டி,

பட்டக்காரன்,

நாட்டாண்மைக்காரன், பட்டத்துப்பிள்ளை, பண்ணாடி, பெரியதனக்காரன், மணியக்காரன், மன்றாடி (மண்ணாடி, மந்திரி) மூப்பன் முதலிய பெயர்களுள் ஒன்றைப் பூண்டு, ஊராரால் தேர்ந்தெடுக்கப்படாமல் தந்தையினின்று மகனுக்கு வரும் வழிமுறை யுரிமைப்படி ஊர்த்தலைவனா யிருப்பவன், தன் ஊர் வழக்குகளில் கொலை யொழிந்த பிறவற்றையெல்லாம் தானே தீர்த்து வந்ததாகத் தெரிகின்றது.

3

சிற்றூரிலிருந்து அரசனுக்கு வரவேண்டிய வரிகளெல்லாம் ஒழுங்காய் வந்து, ஊர்த்தலைவனோடு, முற்றும் ஒத்துப்போய்க் காரியங்கள் அமைதியாய் நடந்து வந்ததினால், அரசனும் நாட்டதி காரியும் கூட்டூர்ச்சபையாரும் சிற்றூர் வழக்குத் தீர்ப்பில் பெரும்

3. Hindu Administrative Institutions In South India, p.262