உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்நிலையியல்

113

தமிழருள்ளும் ஒருவரைக் குலப்பட்டத்தினால் மட்டும், ஒரு குலத்தாரென்று எங்ஙனங் கொள்ள வியலும்? முதலியார் குலத்தை எடுத்துக்கொள்ளின், வேளாண் முதலி, செங்குந்த முதலி, அகம் படிய முதலி, கோலிய முதலி, முதலிப் பெண்ணை மணந்ததனால் ஆன முதலி, தானே பட்டஞ் சூட்டிக்கொண்ட முதலி, பண்டை அரசியல் அதிகாரிகள்வழி வந்த முதலி எனப் பலவகையுண்டே.

மேலும், முதலியார் என்பது படைமுதலியார்(சேனை முதலியார்) என்னும் படைத்தலைவர் பதவிப் பெயரின் குறுக்க மாதலால், அதை அரியநாயக முதலியார் என்னும் விசயநகரப் படைத் தலைவர் போன்றாரின் வழியினரே மதிப்புறவுப் பட்ட மாகப் (courtesy title) பூணுவது, மேலை முறைப்படி பொருந்தா திருக்க, பொதுவகையான படைஞரின் வழியின ரெல்லாம் அப் பட்டத்தை வழிவழி பூணுவது எங்ஙன் பொருந்தும்?

இன்றும், திருப்பனந்தாள் மடத்தில், பிராமணப் பையன் களையே சமற்கிருத வகுப்பிற்குச் சேர்ப்பதும், பிராமண மாண வர்க்கும் தமிழ மாணவர்க்கும் வெவ்வேறிடத்தில் உண்டி படைப் பதும், முகம், மீனம் முதலிய தூய தென்சொற்களை வடசொல் லென்று கற்பிப்பதும், வழக்கமாயிருப்பதாகத் தெரிகின்றது.

மும்மடங்களும் ஆரியச் சார்பாயிருந்து குலவேற்றுமை

காட்டுவதற்கு, பின்வருபவை கரணியமா யிருக்கலாம்:

(1) வெள்ளாண் குலத்தினரே மடத்தலைவராக இருத்தல் வேண்டுமென்னுங் கொள்கை.

(2) சமற்கிருதம் தேவமொழியும், வேதம் சிவமத மூலமும், ஆகு மென்னுங் குருட்டு நம்பிக்கை.

(3) ஆரியத்தைப் போற்றாவிடின், பிராமண வழக்கறிஞர் சிவ மடங்களை அறநிலையப் பாதுகாப்பு மன்ற ஆட்சிக் குட்படுத்தி விடுவர் என்னும் அச்சம்.

(4)

சூத்திரனுக்குத் துறவில்லை யென்னும் ஆரியக் கொள்கை பற்றிய தாழ்வுணர்ச்சி.

(5) சிவத் தொன்மங்களும் (புராணங்களும்) திருமந்திரமும் சிவ ஞான போதமும் முதலிய கொண்முடிபு நூல்களும், சிறப்பாக, ஓங்காரப் பகுப்பும் சிவாயநம என்னும் திருவைந் தெழுத்தும் மெய்ப்பொருள் முப்பத்தாறென்னும் முடிபும் ஆகியவை, ஆரியச் சார்பாயிருத்தல்.

இவற்றை நீக்குவதற்கு, ஒவ்வொரு மடத்திலும், தனித்தமிழ் ஆசிரியர் ஒருவரையும் உண்மை வரலாற்றாசிரியர் ஒருவரையும்