உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தமிழர் மதம்

மாற்றத்தைச் செய்தல் வேண்டும். இந்து என்னுஞ் சொல் ஆரிய அடிமைத்தனத்தைக் குறித்தலால், உரிமைத் தமிழர் அச் சொல்லால் தம்மைக் குறித்தல் பெரு மானக்கேடான செயலாகும்.

முதற்கண், செந்தமிழ்ப் பாண்டிநாட்டின் தென்தலைநக ராகிய திருநெல்வேலியில் உள்ள, திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் பெயரைத் 'திரவியம் தாயுமானவர் தென்னவர் கல்லூரி' யென்று நெல்லைத் தமிழ மாணவர் மாற்றி, ஏனைக் கல்விநிலைய மாணவர்க்கும் நல்வழி காட்டுவாராக.

6. எல்லா மதமும் தனித்தமிழ் போற்றல்

கடவுள் புறக்கண்ணாற் காணப்படாமையாலும், மதம் மறுமையை நோக்கிய தாதலாலும், மக்கள் மனப்பான்மை பல்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், உள்நாட்டு மதமென்றும் வெளிநாட்டு மதமென்றும் வேறுபாடு காட்டாது கருத்துவேறு பாட்டிற்கு இடந்தந்து, தனித்தமிழைப் போற்றுவதையே எல்லா மதத்தாரும் கடைப்பிடித்தல் வேண்டும்.

7. தவத்திருக் குன்றக்குடி அடிகள் கடமை

சிறந்த தமிழறிஞராயும் துறவியராயும் தமிழப் பண்பாட் டி னராயும் சீர்திருத்த நோக்கினராயும் ஒரு திருமடத் தலைவராயும் உள்ள, தவத்திருக் குன்றக்குடி அடிகள், தமிழ்நாட்டுச் சிவமடங்களி லேனும், பண்டைக் கடவுட் சமய உருவிலா வழிபாட்டைப் புகுத்த முயல்வார்களாக.