உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

131

திருப்பாற்கடல் கடைந்து வெண்ணெ யெடுத்ததாகக் கதை கட்டிவிட்டனர். அக் கதையிற் பகுத்தறிவிற் கொவ்வாத பல செய்தி களிருத்தல் காண்க.

வேதப் பெயர்கள்

வேதமொழியிலும் சமற்கிருதத்திலும் நூற்றுக்கணக்கும் ஆயிரக் கணக்குமான தமிழ்ச்சொற்கள் இருப்பதுடன், வேதத்தின் பெயர்களும் தென்சொல் திரிபாகவே உள்ளன.

விழித்தல் = கண் திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு, ஓதி (ஞானம்).

"விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்"

(திருமந்.)

விழி - L. vide, OS. wit, Goth. wit. ON. vit, Skt. வித் - வேத = அறிவு, அறிவுநூல், மறை.

செவியுறுதல் = கேட்டல். செவியுறு ச்ரு ச்ருதி = கேள்வி, எழுதாக் கிளவியாய்க் கேட்டறியப்பட்ட ஆரிய மறை. வேதப் பிரிவின் பெயரான மண்டலம் என்பதும் தென்

சொல்லே.

=

மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி. மண்டியிடுதல் காலை வளைத்து நிற்றல் அல்லது இருத்தல். மண்டு - மண்டலம் = வட்டம், நாட்டுவட்டம், காலவட்டம், வட்டமான பொருள், நூற்பிரிவு மண்டலம் - மண்டிலம். என் ‘வடமொழி வரலாறு'

பார்க்க.

22

"மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும்' (தொல்.அகத்.41) தொண்டைமண்டலம், கொங்குமண்டலம் என்பன தொன்மையான நாட்டுப் பெயர்கள்.

மண்டலம் மண்டலி. மண்டலித்தல் = வட்டமிடுதல், பாட்டின் எல்லா அடிகளும் அளவொத்திருத்தல்.

"மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும்" (தொல். செய்.116)

வட்டமிடும் அல்லது வட்டமாயிருக்கும், பாம்பு, நச்சுப்பூச்சி முதலிய உயிரிகளும், நரப்பிசைக் கருவிகளும், மண்டலம் அல்லது மண்டலி எனப் பெயர் பெற்றுள்ளன.

மந்திரம் முதன் முதலாகத் தோன்றியது தமிழிலேயே.

"மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்'

(தொல். எச்ச.53)